உ.பி. பஸ்ஸில் தீ: 9 பேர் கருகி பலி

Published:

அமேதி: உத்தரப் பிரதேச மாநிலம் ம் அமேதி அருகே பீப்பர்புர் பகுதியில், சாலைப் போக்குவரத்துக் கழக பஸ்சில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 6க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான அந்த பஸ், பைசாபாத்தில் இருந்து சுல்தான்புர் சென்று கொண்டிருந்தது. பஸ்ஸில் 42 பயணிகள் இருந்தனர். அப்போது, ராம்கான் என்ற கிராமத்தில் அருகே பஸ்ஸில் தீ பிடித்தது. சில பயணிகள், பஸ் ஜன்னலை உடைத்து வெளியே குதித்து தப்பித்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் சுல்தான்புர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related articles

Recent articles

spot_img