விவசாயி தற்கொலை: கேஜ்ரிவால் மீது வழக்கு பதிய நடவடிக்கை

புது தில்லி: நிலம் கையகப் படுத்தல் மசோதாவுக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த ஆம் ஆத்மி கட்சியின் கூட்டத்தில், விவசாயி கஜேந்திர சிங் என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், விவசாயியின் தற்கொலைக்கு போலீஸாரின் அலட்சியமே காரணம் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே காரணம் என்றும் ஆம் ஆத்மி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆனால், விவசாயி தற்கொலை குறித்து தகவல் அறிந்தும், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டும், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து பேசியதுடன், பேரணியையும் தொடர்ந்து மேற்கொண்டார். ஆனால், ஆம் ஆத்மி தொண்டர்கள்தான் கஜேந்திர சிங்கைத் தூண்டிவிட்டனர் என்று போலீஸார் தரப்பில் கூறப்பட்டது. இதனால் விவசாயியின் இந்தத் தற்கொலைப் பிரச்னை அரசியலாக்கப்பட்டது. இதனிடையே தில்லி அரசு ஒரு விசாரணைக் குழுவை அமைத்து விசாரித்து வரும்போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலில் தில்லி போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து,விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீதும் வழக்கு பதிவு செய்ய இருப்பதாக தில்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து, முறையான அனுமதி கேட்டு, துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை அணுகியிருப்பதாகவும், அவர் அனுமதியின் பேரில், கேஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என்றும் தில்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories