புது தில்லி: நிலம் கையகப் படுத்தல் மசோதாவுக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த ஆம் ஆத்மி கட்சியின் கூட்டத்தில், விவசாயி கஜேந்திர சிங் என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், விவசாயியின் தற்கொலைக்கு போலீஸாரின் அலட்சியமே காரணம் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே காரணம் என்றும் ஆம் ஆத்மி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆனால், விவசாயி தற்கொலை குறித்து தகவல் அறிந்தும், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டும், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து பேசியதுடன், பேரணியையும் தொடர்ந்து மேற்கொண்டார். ஆனால், ஆம் ஆத்மி தொண்டர்கள்தான் கஜேந்திர சிங்கைத் தூண்டிவிட்டனர் என்று போலீஸார் தரப்பில் கூறப்பட்டது. இதனால் விவசாயியின் இந்தத் தற்கொலைப் பிரச்னை அரசியலாக்கப்பட்டது. இதனிடையே தில்லி அரசு ஒரு விசாரணைக் குழுவை அமைத்து விசாரித்து வரும்போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலில் தில்லி போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து,விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீதும் வழக்கு பதிவு செய்ய இருப்பதாக தில்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து, முறையான அனுமதி கேட்டு, துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை அணுகியிருப்பதாகவும், அவர் அனுமதியின் பேரில், கேஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என்றும் தில்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Hot this week
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஆன்மிகச் செய்திகள்
பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!
மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஆன்மிகச் செய்திகள்
பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!
மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
Entertainment News
Previous article
Next article

