புது தில்லி: ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் நியமனத்துக்கு எதிராக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. பவானி சிங் நியமனம் குறித்த இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல பந்த் அடங்கிய அமர்வு இன்று காலை அளிக்க உள்ளது.

