December 6, 2025, 6:30 AM
23.8 C
Chennai

பயங்கரவாதிகளின் தொடர் குண்டுவெடிப்பு திட்டம் முறியடிப்பு! என்.ஐ.ஏ., அதிரடி வேட்டையில் 10 பேர் கைது!

nia raid - 2025

ஐஎஸ் அமைப்புடன் தொடர்புள்ளதாக 10 பேர் கைதானதைத் தொடர்ந்து தில்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. தில்லியில் புத்தாண்டு வரை உஷார் நிலையில் இருக்க என்.ஐ.ஏ சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கைதானவர்கள் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் குண்டு வைக்க திட்டமிட்டது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

புது தில்லி: வடமாநிலங்களில் என்.ஐ.ஏ., நடத்திய அதிரடி சோதனையில் பயங்கரவாதிகள் 10 பேர் கைது செய்யப் பட்டனர்.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் செயல்திட்டத்தை பின்பற்றி, இந்தியாவில் முக்கியத் தலைவர்களைக் கொல்வதற்கும் சில இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்த்துவதற்கும் திட்டம் தீட்டி, பயங்கர நாசவேலைகளை நிகழ்த்துவதற்காக ஆயுதங்களைத் திரட்டி வந்திருந்த பயங்கரவாத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். என்.ஐ.ஏ. அதிகாரிகள் லக்னௌ உள்ளிட்ட 17 இடங்களில் சோதனை நடத்தியதில், 25 கிலோ வெடிபொருட்கள். ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன!

ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் மீதான ஈர்ப்பால், அதே போன்று இந்தியாவில் செயல்பட ஒரு பயங்கரவாதக் குழுவை இஸ்லாமிய பயங்கரவாத கும்பல்களைச் சேர்ந்த சிலர் உருவாக்கி உள்ளதாகவும், அவர்கள் வட இந்தியாவில் உத்தரப் பிரதேசம் தில்லி உள்ளிட்ட இடங்களில் தாக்குதலை நடத்த உள்ளதாகவும் தேசிய புலனாய்வு முகமை – என்.ஐ.ஏ.,வுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் உஷார் அடைந்தனர்.

nia officials - 2025

ஹர்கத் உல் ஹர்ப் இ இஸ்லாம் என்ற பெயரில் அந்த இஸ்லாமிய கும்பல் 6 மாதங்களுக்கு முன்னர் அமைப்பு ரீதியாக செயல்பட தொடங்கியதாக தெரியவந்ததை அடுத்து, இந்த கும்பலைப் பிடிக்க என்.ஐ.ஏ தீவிரமாக செயல்பட்டது. இதன்படி, புதன்கிழமை இன்று காலை தில்லி, உபி., ஆகிய பகுதிகளில் 17 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் இணைந்து சிபிஐ., மற்றும் உபி.,யின் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் சோதனையில் ஈடுபட்டனர்.

பல மணி நேர சோதனைக்குப் பின்னர், அந்தக் குழுவின் தலைவன் எனக் கருதப்படும் முஃப்தி சோஹைல் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். உபி.,யில் உள்ள அம்ரோகாவில் 5 பேரும், வடகிழக்கு தில்லியில் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆறு மாதங்களாக செயல்பட்டு வரும் இந்த பயங்கரவாதக் குழுவில் 16 பேர் உறுப்பினர்களாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகப் படுகின்றனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். பிடிபட்டவர்களிடமிருந்து 25 கிலோ வெடி பொருட்கள், ராக்கெட் லாஞ்சர், துப்பாக்கிகள், 100 செல்போன்கள், 135 சிம் கார்டுகள், லேப்டாப், மெமரி கார்டுகளுடன் ஏழரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories