பவானி சிங் நியமனம் செல்லாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

supreme-court-India புது தில்லி: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசுத் தரப்பு வழக்குரைஞராக பவானி சிங்கை நியமனம் செய்தது செல்லாது உச்ச நீதிமன்றம் இன்று காலை பரபரப்பு தீர்ப்பு கூறியது. இது தொடர்பாக, பவானி சிங் நியமனத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக., பொதுச் செயலர் அன்பழகன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த மனுவை விசாரித்தபோது, மாறுபட்ட கருத்துக்களை இரு நீதிபதிகளும் தெரிவித்திருந்தனர். bhavani_singhஇதையடுத்து இந்த வழக்கை 3 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே. அகர்வால், பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. நீதிபதி மிஸ்ரா தலைமையிலான அமர்வு கடந்த 21ஆம் தேதி இந்த மனு குறித்துக் கூறுகையில், பவானி சிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டது சரியல்ல எனினும், இந்த வழக்கில் மறு விசாரணை தேவையில்லை. இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு ஏப்ரல் 27ஆம் தேதி வழங்கப்படும் என்று தெரிவித்தது அதன் அடிப்படையில், இன்று இந்த மனு மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், பவானி சிங்கை வழக்கறிஞராக நியமித்தது செல்லாது என மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. மேலும், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் மறு விசாரணை கிடையாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பவானி சிங்கின் எழுத்துபூர்வ வாதத்தை ஏற்கக்கூடாது: சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என்று திமுக பொதுச் செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், பவானி சிங்கின் எழுத்து பூர்வ வாதங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங்கின் எழுத்துபூர்வ வாதங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், கர்நாடக அரசு மற்றும் அன்பழகனின் எழுத்துபூர்வ வாதங்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இரு தரப்பு வாதங்களை பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஊழல் வழக்குகள் சமுதாயத்தை எப்படி பாதிக்கின்றன என்பதை உணர்ந்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அன்பழகன் தரப்பு, தனது எழுத்துபூர்வ வாதத்தை நாளைக்குள் கர்நாடக உயர் நீதின்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்; இந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளிக்க தடை ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் கூட்டு சதி: அன்பழகன் எழுத்துபூர்வ வாதம் தாக்கல் anbazhagan-dmk ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், திமுக பொதுச் செயலர் அன்பழகன் சார்பில் எழுத்துபூர்வ வாதம் இன்று கர்நாடக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை நீதிபதி குமாரசாமி கேட்டிருந்ததற்கு விளக்கம் அளிக்கும் வகையில், கூட்டுச் சதி எவ்வாறு நடைபெற்றது, அதில் ஈடுபட்ட நபர்கள் உள்ளிட்ட தகவல்களை எடுத்துக் கூறி எழுத்துபூர்வ வாதத்தில் தெரிவித்துள்ளதாக, வழக்குரைஞர் தரப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக, இன்று சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசு வழக்குரைஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் அன்பழகன் தரப்பில் எழுத்துபூர்வ வாதத்தை 90 பக்கங்களுக்குள் நாளை ஏப்.28க்குள் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இன்றே 81 பக்கங்கள் கொண்ட எழுத்து பூர்வ வாதத்தை அன்பழகன் தரப்பு வழக்குரைஞர் பெங்களூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories