புது தில்லி: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசுத் தரப்பு வழக்குரைஞராக பவானி சிங்கை நியமனம் செய்தது செல்லாது உச்ச நீதிமன்றம் இன்று காலை பரபரப்பு தீர்ப்பு கூறியது. இது தொடர்பாக, பவானி சிங் நியமனத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக., பொதுச் செயலர் அன்பழகன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த மனுவை விசாரித்தபோது, மாறுபட்ட கருத்துக்களை இரு நீதிபதிகளும் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து இந்த வழக்கை 3 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே. அகர்வால், பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. நீதிபதி மிஸ்ரா தலைமையிலான அமர்வு கடந்த 21ஆம் தேதி இந்த மனு குறித்துக் கூறுகையில், பவானி சிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டது சரியல்ல எனினும், இந்த வழக்கில் மறு விசாரணை தேவையில்லை. இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு ஏப்ரல் 27ஆம் தேதி வழங்கப்படும் என்று தெரிவித்தது அதன் அடிப்படையில், இன்று இந்த மனு மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், பவானி சிங்கை வழக்கறிஞராக நியமித்தது செல்லாது என மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. மேலும், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் மறு விசாரணை கிடையாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பவானி சிங்கின் எழுத்துபூர்வ வாதத்தை ஏற்கக்கூடாது: சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என்று திமுக பொதுச் செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், பவானி சிங்கின் எழுத்து பூர்வ வாதங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங்கின் எழுத்துபூர்வ வாதங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், கர்நாடக அரசு மற்றும் அன்பழகனின் எழுத்துபூர்வ வாதங்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இரு தரப்பு வாதங்களை பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஊழல் வழக்குகள் சமுதாயத்தை எப்படி பாதிக்கின்றன என்பதை உணர்ந்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அன்பழகன் தரப்பு, தனது எழுத்துபூர்வ வாதத்தை நாளைக்குள் கர்நாடக உயர் நீதின்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்; இந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளிக்க தடை ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் கூட்டு சதி: அன்பழகன் எழுத்துபூர்வ வாதம் தாக்கல்
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், திமுக பொதுச் செயலர் அன்பழகன் சார்பில் எழுத்துபூர்வ வாதம் இன்று கர்நாடக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை நீதிபதி குமாரசாமி கேட்டிருந்ததற்கு விளக்கம் அளிக்கும் வகையில், கூட்டுச் சதி எவ்வாறு நடைபெற்றது, அதில் ஈடுபட்ட நபர்கள் உள்ளிட்ட தகவல்களை எடுத்துக் கூறி எழுத்துபூர்வ வாதத்தில் தெரிவித்துள்ளதாக, வழக்குரைஞர் தரப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக, இன்று சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசு வழக்குரைஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் அன்பழகன் தரப்பில் எழுத்துபூர்வ வாதத்தை 90 பக்கங்களுக்குள் நாளை ஏப்.28க்குள் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இன்றே 81 பக்கங்கள் கொண்ட எழுத்து பூர்வ வாதத்தை அன்பழகன் தரப்பு வழக்குரைஞர் பெங்களூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பவானி சிங் நியமனம் செல்லாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Popular Categories


