தருமபுரியில் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற ஒத்துழைக்குமாறு ஆட்சியருக்கு அன்புமணி கடிதம்

சென்னை: தருமபுரியில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகளை செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்று கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தையும், மோட்டாங்குறிச்சி கிராமத்தை தத்து எடுக்கும் நிகழ்ச்சியையும் மாவட்ட ஆட்சியர் புறக்கணித்து விட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி, இத்தகைய போக்கு மிகவும் வருத்தமளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆட்சியருக்கு அவர் எழுதியுள்ள கடித நகலை அன்புமணி வெளியிட்டார். அந்தக் கடிதத்தின் விவரம்: பெறுதல்: மாவட்ட ஆட்சியர் அவர்கள், தருமபுரி. அன்புடையீர் வணக்கம், நாடாளுமன்ற 16-வது மக்களவைக்கு தமிழகத்தில் 24.04.2014 அன்று நடைபெற்ற பொது தேர்தலில் மிக கடுமையான போட்டிக்கு இடையில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியை சார்ந்த சுமார் 5 இலட்சம் வாக்காளர்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து தங்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்துள்ளனர். நான் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் வாழும் சுமார் 18 இலட்சம் மக்களின் பிரதிநிதியாக உள்ளேன். Ø கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மனித வள மேம்பாடு உள்ளிட்ட சமூக வளர்ச்சி குறியீடுகளில் தமிழக அளவில் தருமபுரி மாவட்டம் மிகவும் பின்தங்கிய நிலையில் 32 வது மாவட்டமாக உள்ளது. Ø தருமபுரி மாவட்டத்தை சார்ந்த சுமார் 3 இலட்சம் பேர் தான் பிறந்த சொந்த மண்ணில் வாழ்வாதாரம் பொய்த்துப்போனதால் வெளி மாநிலங்களுக்கு பிழைப்புத் தேடி கூலி வேலைக்கு சென்றுள்ளனர். Ø தருமபுரியில் அமையவுள்ள சிப்காட்டிற்கு நிலம் தேர்வு செய்தும் மேற்கொண்டு ஆக்கபூர்வமான பணிகள் எதுவும் நடைப்பெறவில்லை. Ø ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டும் அனைத்து பகுதிகளுக்கும் முழுமையாக குடிநீர் இதுவரை வழங்கப்படவில்லை. வழங்கப்படும் பகுதிகளிலும் குடிநீர் விநியோகமும் சீராக இல்லை. பெரும்பாலான பகுதிகளில் திட்ட நோக்கத்திற்கு முரண்பாடாக சுத்திகரிக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீருடன் அந்தந்த பகுதிகளில் இருந்து எடுக்கப்படும் சுத்திகரிக்கப்படாத நிலத்தடி நீர் கலந்து விநியோகம் செய்யப்படுகிறது. Ø விதவை, முதியோர் ஓய்வூதியம் பெற்றுவந்த தகுதியான ஆயிரகணக்கான நபர்களுக்கு தற்போது ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. Ø குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பல ஆண்டுகளாகியும் இதுவரை குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை. Ø நீர்வள ஆதாரங்களை முறையாக திட்டமிட்டு நிறைவேற்றாததால் மழை பெய்தும், மழைநீரை தேக்கி வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் வீணாகிறது. Ø சித்தேரி, சிட்லிங், வத்தல்மலை, கோட்டூர்மலை உள்ளிட்ட மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களுக்கு சாலை, குடிநீர், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட முறையாக நிறைவேற்றப்படவில்லை. மாவட்ட முன்னேற்றத்திற்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் இணைந்து பணியாற்றுவது அவசியமாகிறது. இது என்னுடைய கொள்கையாகும். எல்லோரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாகும். இதற்காக தருமபுரி மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தை உருவாக்கவும், அதற்காக பாடுபடவும் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்திருந்தேன். என்னால் தருமபுரி மாவட்டம் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையில்தான் எனக்கு வாக்களிக்கப்பட்டது. இந்த நம்பிக்கையை நிறைவேற்ற பாடுபடும் உண்மையான மக்கள் பிரதிநிதியாக செயலாற்ற விரும்புகிறேன். இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். மாவட்ட நிர்வாகத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையே புரிதலை உருவாக்குவதற்காகவும் வளர்ச்சி திட்டங்களை ஒருங்கிணைக்கவும் அமைக்கப்பட்டதே மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவாகும். (District Vigilance & Monitoring Committee) மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவின் வழிக்காட்டு நெறிமுறைகள் படி நாடாளுமன்ற உறுப்பினரான என்னை தலைவராகவும், மாவட்ட ஆட்சி தலைவரான உங்களை செயலாளராகவும் கொண்டு இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 06.12.2014 அன்று நடைபெற்ற இக்குழுவின் முதல் கூட்டத்திற்கு தேதி, நேரம் உள்ளிட்ட தகவல்கள் மூன்று வாரங்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இக்கூட்டத்தில் நீங்கள் பங்கேற்காமல் அமைச்சர் வேறொரு நிகழ்ச்சிக்கு அழைத்ததாக கூறி சென்றுவிட்டீர்கள். நடுவணரசின் மாதிரி கிராம திட்டத்தின் கீழ் மோட்டாங்குறிச்சி ஊராட்சியை நான் தேர்வு செய்தேன். திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் படி கடந்த 16.04.2015 அன்று நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமிலும் தாங்கள் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டீர்கள். வெளிமாவட்டத்தை சார்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்கும் நிகழ்சிகளில் நீங்கள் ஆர்வமுடன் பங்கேற்ப்பதும், தருமபுரி மாவட்ட மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட நான் பங்கேற்கும் மிக முக்கியமான அரசு நிகழ்ச்சிகளை நீங்கள் தொடர்ந்து புறக்கணிப்பதும் வருத்தமளிக்கிறது. அதிகாரிகளிடம் வளர்ச்சி பணிகளுக்கு தேவையான ஒத்துழைப்பு முழுமையாக இல்லை. மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் நீங்கள் தான் தலைவர். உங்கள் தலைமையில் தான் அதிகாரிகள் அனைவரும் இயங்குகின்றனர். நான் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித் தலைவரான நீங்களே புறக்கணிப்பது தவறான முன்னுதாரனமாகிவிடகூடாது. தருமபுரி மாவட்டத்தை முன்னேற்ற வேண்டும். இம்மாவட்ட மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற மக்கள் நல சேவைப்பணியில் எனக்கு அரசியல் நோக்கம் எதுவும் கிடையாது. மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் இப்பணியை என்னுடைய முதன்மை கடமையாக கருதுகிறேன். ஆகவே இனி வரும் காலங்களில் அரசியல் பார்க்காமல் தருமபுரி மாவட்ட மக்களின் நலன் கருதி எல்லோரும் சேர்ந்து மக்கள் பணியாற்றுவோம். அனைவரும் ஒருங்கிணைந்து இந்த மாவட்டத்தை முன்னேற்ற உங்களுடைய முழு ஒத்துழைப்பை வழங்க அன்புடன் எதிர் பார்கின்றேன். நன்றி, அன்புடன் (மரு. அன்புமணி இராமதாஸ்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories