ஐபிஎல் சீஸன் 8 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெறுவதாக இருந்த போட்டி பலத்த மழை காரணமாக கைவிடப்பட்டது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நேற்று மாலை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை பெய்தது. பிற்பகல் 2 மணியில் இருந்து இடியுடன் கூடிய கன மழை பெய்ததால், மைதானத்தில் நீர் தேங்கியது. தண்ணீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றும், தண்ணீரை முழுமையாக வெளியேற்ற இயலவில்லை. இதனால், இரவு 7.15 மணிக்கு இந்த ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இந்த சீசனில் ரத்தான முதல் போட்டி இதுவே. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

