சீர்காழி அருகே காரை வழிமறித்து பெண் பட்டப் பகலில் படுகொலை

murder-sirgaziசீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே காரில் சென்ற பெண்ணை, காரை வழிமறித்து இறக்கி, பட்டப் பகலில் 10 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்தவர் ராமு என்ற ராதாகிருஷ்ணனின் மனைவி வினோதா (38). இவர்களுக்கு மூன்று குழந்தைகள். சாராய வியாபாரியான ராமுவுக்கு ரூ.90 கோடி சொத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ராமுவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த எழிலரசிக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே எழிலரசியை ராமு இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், சொத்தின் ஒரு பகுதியை எழிலரசி பெயருக்கு எழுதி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரியில் எழிலரசியுடன் ராமு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, காரைக்கால் பகுதியில் அவர்களை வழிமறித்த ஒரு கும்பல் ராமுவை வெட்டிக் கொலை செய்தது. எழிலரசி காயத்துடன் தப்பி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். அதன் பின்னர் வினோதாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் அவர் தனது குழந்தைகளுடன் சென்னைக்குச் சென்று விட்டார். அங்கு தனது தங்கை பிரியாவின் வீட்டில் அவர் தங்கியிருந்தார். இதனிடையே ராமு கொலை தொடர்பாக வினோதா, அவரது தங்கை கணவர் ஆனந்த், ராமு நண்பர் அய்யப்பன், வைத்தியநாதன் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குப் பதிவு செய்த சில மாதங்களிலேயே ராமுவின் நண்பர் அய்யப்பன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, எழிரலசி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் சொத்துக்கள் தொடர்பாக சென்னையில் இருந்து திருமலைராயன்பட்டினம் வந்த வினோதா நேற்று மதியம் காரில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் சென்ற காரில் வினோதாவின் தங்கை கணவரின் நண்பர் நவநீததிருஷ்ணனும் உடன் சென்றார். அவர்கள் வந்த கார், சீர்காழி புறவழிச்சாலை உப்பனாற்றுப் பாலம் அருகே சென்ற போது, அவர்களைப் பின்தொடர்ந்து வந்த ஒரு கார் வினோதாவின் காரை வழிமறித்தது. கார் ஓட்டுநர் வண்டியை நிறுத்தவே, 10 பேர் கொண்ட கும்பல் அந்தக் காரில் இருந்து இறங்கி வினோதா வந்த காரை அடித்து நொறுக்கினர். ஓட்டுநர் மற்றும் காரில் வந்தவரை மிரட்டி, காரில் பின் இருக்கையில் இருந்த வினோதாவை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் முகம் சிதைந்து அதே இடத்தில் உயிரிழந்தார். கொலை செய்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. அவர்கள் வந்த புதுச்சேரி பதிவு எண் கொண்ட கார், கொள்ளிடம் ரயில் நிலையம் அருகே நிறுத்தப் பட்டிருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து, விசாரித்தனர். அதில், அந்த காரின் நம்பர் பிளேட் போலியானது என்று தெரியவந்தது. வினோதாவின் படுகொலை குறித்து அவரது தங்கை கணவர் ஆனந்த் சீர்காழி போலீசில் புகார் அளித்தார். டி.எஸ்.பி. வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து எழிலரசியைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories