விவசாய பயிர்க் கடனுக்கு 7 % வட்டிச் சலுகையை நிரந்தரமாக்க வேண்டும்: சரத்குமார் வேண்டுகோள்

சென்னை: விவசாய பயிர்க் கடனுக்கு 7 சதவீத வட்டிச் சலுகையை நிரந்தரமாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து,அவர் வெளியிட்ட அறிக்கை: ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த இடத்தில் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியான செய்தி என்பதைத் தாண்டி நம் தேசத்திற்கு ஏற்பட்டிருக்கும் அவமானம் – தலைகுனிவு என்பதே 120 கோடி மக்களும் வேதனையோடு மனதில் பதிக்க வேண்டிய விஷயம். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதத்திற்கும் மேல் பங்களிப்பை தருவது விவசாயம் என்று நாம் பெருமையோடு கொள்ளும் மகிழ்ச்சி, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று வரும்போது அந்த மகிழ்ச்சியை தற்காலிகமான மகிழ்ச்சியாகத்தான் கருத முடியும். விவசாயியை, சாகுபடி செய்து சாதனை படைப்பவனாக மாற்ற வேண்டிய அரசு, அவன் சாகும்படி செய்வதுதானா சாதனை? வங்கிகளில் பல லட்சம் கோடி ரூபாய் வராக் கடனாக மாற்றிய பெருமைக்குரிய தொழில் அதிபர்கள் தங்கள் வசதி வாய்ப்புகளை இம்மியளவும் குறைத்துக்கொள்ளவில்லை. ஆனால், சில ஆயிரம் கடன்பட்ட விவசாயிகளை மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்ய வைப்பதா பொருளாதார முன்னேற்றம்?. இத்தகைய நிலையில் ரிசர்வ் வங்கி, 2015-2016 சிறப்பு விவசாய கடன் சலுகை அளித்ததில் விவசாயிகளுக்கு பயிர் கடன் 7 சதவீதம் வட்டியில் வழங்க வேண்டும் என்றும், குறித்த காலக்கெடுவில் கட்டி முடிந்தால் அதில் 3 சதவீதம் சலுகை வழங்கி 4 சதவீதம் வட்டி மட்டும் வசூலிக்கலாம் என்றும் வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது. இச்சலுகையை 2015-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதியோடு முடித்துக்கொள்ளுமாறு அறிவித்துள்ளது. பின்னர் இதே சலுகையை ஜூன் இறுதி வரை நீட்டித்துள்ளது. இப்படி அவ்வப்போது நீட்டிக்காமல், விவசாய பயிர்க்கடனுக்கு 7 சதவீதம் வட்டியை உறுதி செய்து அதை ஒழுங்காக கட்டும் விவசாயிகளுக்கு 3 சதவீதம் சலுகையை வழங்கி 4 சதவீதம் வட்டியை உறுதி செய்ய வேண்டும். ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள இந்த சலுகையை விவசாயிகளுக்கு நிரந்தரமாக கிடைக்கச் செய்ய வேண்டும். பருவ மழைக் குறைபாடுகள், வறட்சியும், வெள்ளமும் மாறிமாறி ஏற்படுத்தும் பாதிப்பு, விவசாயத்தில் நிலையற்ற தன்மை, லாபம் என்பது கேள்விக் குறியான நிலை என விவசாயத் தொழிலில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டிய அரசு, விவசாயத்தை மேலும் பலவீனப்படுத்தும் விதமாக விவசாயக் கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பாரத ரிசர்வ் வங்கி தற்போது அதிகரிக்க இருக்கும் வட்டி விகித உயர்வை திரும்பப்பெற செய்வதோடு மேலும் குறைக்கச் செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் நலனில் தங்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்று மத்திய அரசை சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories