தன் நாட்டுக்கு உடனடி உதவிக்கரம் நீட்டியதற்கு மனீஷா கொய்ராலா மோடிக்கு நன்றி

Published:

மும்பை: நிலநடுக்கத்தால் பெரும் சீரழிவைச் சந்தித்துள்ள நேபாள நாட்டுக்கு உடனடியாக உதவிக் கரம் நீட்டி, மீட்புப் பணிகளில் முழு உதவிகளைச் செய்வதற்காக பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த நடிகை மனீஷா கொய்ராலா, முன்னாள் நேபாள பிரதமர் பி.பி. கொய்ராலாவின் பேத்தி. அவர் பின்னாளில் மும்பையிலேயே தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது நாட்டில் ஏற்பட்ட பேரழிவு குறித்து அதிர்ச்சி அடைந்ததாகக் கூறியுள்ள அவர், மோடிக்கு நன்றி தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் செய்தியைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவரது டிவிட்டர் பதிவில்… டிவி முன் அமர்ந்து நேபாள செய்தியைப் பார்த்து வருகிறேன். கண்களில் இருந்து நீர் பெருகுகிறது. இந்தியர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்திய அரசு துரிதமாக செயல்பட்டு நேபாளத்திற்கு உதவி வருகிறது. இதற்காக நன்றி சொல்ல வார்த்தை இல்லை. நேபாளத்திற்கு உதவி செய்து வருவதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.  

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Related articles

Recent articles

spot_img