December 6, 2025, 3:31 AM
24.9 C
Chennai

எந்த ஒரு இந்துவும் தீவிரவாதி ஆக இருக்க முடியாது: கமலுக்கு மோடி பதில்!

modi ji - 2025

ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் அரசியல்வாதி அரிதாரம் பூசிய நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற அமைப்பு போன்ற கட்சியைத் துவக்கி, தேர்தலில் முதல்முறையாக போட்டியிடுகிறார்.

மக்கள் நீதி மய்ய வேட்பாளரை ஆதரித்து, அரவக்குறிச்சி சட்டப் பேரவை இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் கமல். இஸ்லாமியர்கள் அதிகம் பேர் வசிக்கும் பகுதியில் பிரசாரம் செய்த கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியே ஒரு இந்து! அவன் பெயர் கோட்சே என்று கூறினார்.

இவரது கருத்து சமூகத்தை மத ரீதியாகப் பிளவுபடுத்துகிறது என்று கூறி அவருக்கு எதிர்ப்புகள் வலுத்தன.

தன்னை அறிவுஜீவி என்றும், மாற்றத்துக்கான மாவீரன் என்றும் பில்டப் கொடுத்து அரசியலுக்குள் வந்த கமல்ஹாசன், ‘லோக்கல்’ தரை டிக்கெட்களான சீமான், திருமாவளவன் போன்றவர்கள் பேசுவது போல் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்தில் பேசியது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. கமல் தேசிய அளவில் திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் என்பதால், அவரது கருத்து தேசிய அளவில் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது.

குறிப்பாக, கமல் குறிப்பிட்ட கோட்சே மராட்டியர் என்பதால், பாலிவுட் திரையுலகில் இருந்து முதல் எதிர்ப்புக் குரல் வெடித்தது.

இந்நிலையில், கமலின் கருத்துக்கு பதில் அளித்திருக்கிறார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடியிடம் நியூஸ் X சேனல் செய்தியாளர் பேட்டி கண்டபோது, அவரிடம் கமல் கருத்து குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “நான் அறிவுஜீவி கிடையாது, கமல ஹாசன் அளவிற்கு! ஆனால் எந்த இந்துவும் தீவிரவாதியாக இருக்க மாட்டான், தீவிரவாதியாக இருப்பவன் இந்துவாக இருக்க மாட்டான்” என்று கூறினார். #KamalHaasan

எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது; ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் நிச்சயம் அவர் இந்துவாக இருக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறிய கருத்து இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories