எந்த ஒரு இந்துவும் தீவிரவாதி ஆக இருக்க முடியாது: கமலுக்கு மோடி பதில்!

modi ji - 2026

ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் அரசியல்வாதி அரிதாரம் பூசிய நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற அமைப்பு போன்ற கட்சியைத் துவக்கி, தேர்தலில் முதல்முறையாக போட்டியிடுகிறார்.

மக்கள் நீதி மய்ய வேட்பாளரை ஆதரித்து, அரவக்குறிச்சி சட்டப் பேரவை இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் கமல். இஸ்லாமியர்கள் அதிகம் பேர் வசிக்கும் பகுதியில் பிரசாரம் செய்த கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியே ஒரு இந்து! அவன் பெயர் கோட்சே என்று கூறினார்.

இவரது கருத்து சமூகத்தை மத ரீதியாகப் பிளவுபடுத்துகிறது என்று கூறி அவருக்கு எதிர்ப்புகள் வலுத்தன.

தன்னை அறிவுஜீவி என்றும், மாற்றத்துக்கான மாவீரன் என்றும் பில்டப் கொடுத்து அரசியலுக்குள் வந்த கமல்ஹாசன், ‘லோக்கல்’ தரை டிக்கெட்களான சீமான், திருமாவளவன் போன்றவர்கள் பேசுவது போல் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்தில் பேசியது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. கமல் தேசிய அளவில் திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் என்பதால், அவரது கருத்து தேசிய அளவில் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது.

குறிப்பாக, கமல் குறிப்பிட்ட கோட்சே மராட்டியர் என்பதால், பாலிவுட் திரையுலகில் இருந்து முதல் எதிர்ப்புக் குரல் வெடித்தது.

இந்நிலையில், கமலின் கருத்துக்கு பதில் அளித்திருக்கிறார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடியிடம் நியூஸ் X சேனல் செய்தியாளர் பேட்டி கண்டபோது, அவரிடம் கமல் கருத்து குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “நான் அறிவுஜீவி கிடையாது, கமல ஹாசன் அளவிற்கு! ஆனால் எந்த இந்துவும் தீவிரவாதியாக இருக்க மாட்டான், தீவிரவாதியாக இருப்பவன் இந்துவாக இருக்க மாட்டான்” என்று கூறினார். #KamalHaasan

எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது; ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் நிச்சயம் அவர் இந்துவாக இருக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறிய கருத்து இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories