January 20, 2025, 6:49 PM
26.2 C
Chennai

குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளாவிடில் வாக்குரிமையை பறிக்க வேண்டுமாம்!

sakshi-maharajபுது தில்லி: நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, அனைத்து மதத்தவரும் குடும்பக் கட்டுப்பாடு முறையைப் பின்பற்ற வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், பொதுவான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். அந்தச் சட்டத்தைக் கடைபிடிக்கவில்லை எனில், அத்தகையவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட வேண்டும்” – இவ்வாறு கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் பாஜக எம்.பி. சாக்ஷி மஹராஜ். உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது…. “ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 4 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் கூறியதற்கு, பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால், அவர்கள் (முஸ்லிம்கள்) 4 பெண்களைத் திருமணம் செய்துகொண்டு, அவர்கள் மூலம் 40 குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது குறித்து யாரும் எதுவும் சொல்வதில்லை” என்றார் அவர். மேலும், முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டுமென்று நான் கூறவில்லை. ஆனால், குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாக, அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சட்டம் தேவை. நாடு சுதந்திரம் அடைந்தபோது 30 கோடியாக இருந்த மக்கள்தொகை தற்போது 130 கோடியாக உயர்ந்துள்ளது. நாட்டுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ள மக்கள்தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தவரும் குடும்பக் கட்டுப்பாடு முறையை பின்பற்றும் வகையில், பொதுவான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். அந்தச் சட்டத்தை கடைபிடிக்காதவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட வேண்டும் என்று சாக்ஷி மஹராஜ் கூறினார்.

ALSO READ:  மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு; புதிய மேல்சாந்தி பதவியேற்பு!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்!

முதலில் திருப்பரங்குன் றமாகிய படைவீட்டைப் பற்றிச் சொல்கிறார். முருகப்பெருமான் ஆறு படைவீடு களில் எழுந்தருளியிருக்கிறான் என்ற வழக்கு, பலகால மாகத் தமிழ் நாட்டில் இருக்கிறது.

ஐதராபாத் ரயிலை தென்காசி வழியாக இயக்கக் கோரிக்கை!

திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம்

முருக பக்தர்களை திமுக அமைச்சர் சேகர் பாபு அவமதித்த விவகாரம்; இந்து முன்னணி கண்டனம்!

திருச்செந்தூரில் முருக பக்தர்களை திமுக., அமைச்சர் சேகர்பாபு அவமதித்த விவகாரத்தில், இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது அந்த அமைப்பின்

பயணிகள் கவனத்துக்கு… நெல்லை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்எழும்பூர்...