புது தில்லி: நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, அனைத்து மதத்தவரும் குடும்பக் கட்டுப்பாடு முறையைப் பின்பற்ற வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், பொதுவான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். அந்தச் சட்டத்தைக் கடைபிடிக்கவில்லை எனில், அத்தகையவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட வேண்டும்” – இவ்வாறு கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் பாஜக எம்.பி. சாக்ஷி மஹராஜ். உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது…. “ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 4 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் கூறியதற்கு, பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால், அவர்கள் (முஸ்லிம்கள்) 4 பெண்களைத் திருமணம் செய்துகொண்டு, அவர்கள் மூலம் 40 குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது குறித்து யாரும் எதுவும் சொல்வதில்லை” என்றார் அவர். மேலும், முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டுமென்று நான் கூறவில்லை. ஆனால், குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாக, அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சட்டம் தேவை. நாடு சுதந்திரம் அடைந்தபோது 30 கோடியாக இருந்த மக்கள்தொகை தற்போது 130 கோடியாக உயர்ந்துள்ளது. நாட்டுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ள மக்கள்தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தவரும் குடும்பக் கட்டுப்பாடு முறையை பின்பற்றும் வகையில், பொதுவான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். அந்தச் சட்டத்தை கடைபிடிக்காதவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட வேண்டும் என்று சாக்ஷி மஹராஜ் கூறினார்.
குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளாவிடில் வாக்குரிமையை பறிக்க வேண்டுமாம்!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari