குண்டா இருப்பவாரா நீங்கள்? அப்ப கொரோனா கிட்ட உஷாரா இருங்க!

paruman

உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் போது உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகம் முழுவதும் 215 நாடுகளை பாதித்துள்ள கொரோனா வைரஸ் வயதானோரையும், உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டோரையும் அதிகம் தாக்கும் என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக உடல்பருமன் அதிகமாக இருப்போரும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள் என்று அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உடல் பருமன் அதிகம் இருப்போர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

உடல் பருமனில் அதிகபட்சமாக உள்ள முதல் 5 நாடுகளில் இந்தியாவும் உள்ளது. 25 சதவீதத்துக்கும் அதிகமான நபர்கள் உடல்பருமன் உடையவர்களாக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் பெண்களில் சுமார் 30 சதவீதமும், ஆண்கள் 28 சதவீதமும் உடல்பருமன் உடையவர்களாக இருக்கின்றனர்.

ஒருவருடைய உடல் எடை, அவரது உயரத்திற்கு ஏற்றபடி தான் இருக்க வேண்டும். அதாவது ஒருவரின் உடல் எடையில் இருந்து உயரத்தின் இரு மடங்கை வகுத்தால் கிடைப்பது சரியான உடலுக்கேற்ற எடை விகிதமாகும்.

உடல் எடை அதிகமாக இருந்தால், நுரையீரலின் செயல்பாடு பாதிக்கப்பட்டு ரத்தத்திற்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கொரோனாவுக்கு உயிரிழக்க நேரிடுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பின் படி இதுவரை, கொரோனாவால் உயிரிழந்தோரில் 6 பேர் உடல்பருமன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள். பொதுவாக உடல் பருமன் காரணமாக நுரையீரலின் இயக்கமும் பாதிக்கப்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடல் பருமனோடு இருப்பவர்கள் சுறுசுறுப்பாக இயங்க முயற்சிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். எடையை குறைக்க தினமும் அரை மணி நேரமாவது நடைபயிற்சியை கட்டாயமாக்கி கொள்ளுங்கள் என்றும் மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories