இறந்து பிறந்த குழந்தை! ஊருக்குள் அடக்கம் செய்ய மறுத்த மக்கள்! கால்வாயில் வீசிய பெற்றோர்!

karnul-kadapa

ஆந்திராவில் இறந்து பிறந்த தனது குழந்தையை கொரோனா அச்சத்தால் கிராமத்தினர் அடக்கம் செய்ய மறுத்ததால் நீர்பாசன கால்வாயில் தூக்கி எரிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கோட்டப்பாடு கிராமத்தை சேர்ந்தவர் ஷம்ஷா வாலி. இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தனது கர்ப்பிணி மனைவி மாதர்பீக்கு பிரசவ வலி எடுத்ததை தொடர்ந்து நந்தியால் அரசு பொது மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவரது மனைவி மாதர்பீக்கு நேற்று பெண்குழந்தை ஒன்று இறந்த நிலையில் பிறந்துள்ளது. இதனை அடுத்து நேற்று மாலை இறந்த குழந்தையுடன் கிராமத்துக்கு திரும்பிய ஷம்ஷா வாலி தனது குழந்தையை கிராமத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்ய விரும்பியுள்ளார்.

இதற்காக கிராம மக்களிடம் அனுமதி கேட்டபோது அந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருந்திருக்கலாம் என்ற அச்சத்தில் குழந்தையை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

baby 3

இதனால் மனவேதனை அடைந்த ஷம்ஷா வாலி வேறு வழியில்லாமல், தனது குழந்தையின் உடலை கர்னூல்-குடபா கால்வாயில் வீசி சென்றார். இதனை அடுத்து கால்வாய் நீரில் மிதக்கும் குழந்தையின் சடலத்தைக் கண்ட சில உள்ளூர்வாசிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை அடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் கிராமவாசிகள் குழந்தையை அடக்கம் செய்ய மறுத்தால் வேறு வழியில்லாமல் குழந்தையை கால்வாயில் வீசியதாக ஷம்ஷா வாலி தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கிராம மக்களை சமாதானப்படுத்திய காவல்துறையினர் குழந்தையில் உடலை கல்லறையில் அடக்கம் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories