எனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டாம்… வேண்டாம்… மோதிக்கு அருண் ஜேட்லி கடிதம்!

02 July25 Arun Jetly - 2026

எனக்கு உடல்நலம் சரியில்லை, எனவே மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோதிக்கு மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு அமைந்த பாஜக தலைமையிலான தேஜகூ., அரசில் மத்திய நிதி அமைச்சராகப் பதவி வகித்தவர் அருண் ஜேட்லி! இவர் தேர்தலில் நின்று போட்டியிடாமல், மாநிலங்களவை உறுப்பினராகி பதவியை வகித்தவர் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.

மத்திய நிதி அமைச்சராக சிறப்புற பதவி வகித்தார். மோதியின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். ஆனாலும், இவருக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்துடன் தொடர்பு உண்டு என்றும், சிதம்பரம் குடும்பம் நிதி முறைகேடு வழக்குகளில் சிக்கிக் கொண்ட போதும், இவரின் தயவால்தான் தப்பித்து வருகிறார்கள் என்றும் குற்றச்சாட்டுகளும் இவர் மீது கூறப் பட்டதுண்டு.

அதே போல், அருண் ஜேட்லிக்கு ஆகாதவராக பாஜக.,வில் இருப்பவர் சுப்பிரமணியம் சுவாமி. அருண் ஜேட்லி மீது சில குற்றச்சாட்டுகளையும் சுமத்திவருகிறார். மோதியை தவறாக வழிநடத்துகிறார் என்றும் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

இருப்பினும், அருண் ஜேட்லி தேர்ந்த பொருளாதார நிபுணராக தன்னைக் காட்டி வந்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு அழகாக பதில் அளிப்பார்.

இருப்பினும் அருண் ஜேட்லி கடந்த ஒன்றரை வருடங்களாக உடல் நலம் குன்றிய நிலையில் அவதிப்பட்டு வருகிறார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அப்போது இவருக்கு பதிலாக நிதி அமைச்சகத்தின் தற்காலிகப் பொறுப்பை ஏற்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார்.

arunjaitly letter - 2026உடல் நலக் குறைவு காரணமாக அருண் ஜேட்லி தேர்தலில் போட்டியிடவுமில்லை. தற்போது மத்தியில் மோதி அமைச்சரவை நாளை பதவியேற்கிறது.

இந்நிலையில் அருண் ஜேட்லி, பிரதமர் நரேந்திர மோதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்… தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் அங்கமாக இருந்ததை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். முதல்முறையாக இடம்பெற்ற தேஜகூ கூட்டணி அமைச்சரவையிலும், கட்சியிலும், எதிர்க்கட்சியாக இருந்த போதிலும் எனக்கு கட்சித் தலைமை நல்ல பொறுப்புகளை வழங்கியது.

arunjaitly - 2026
உடல் நலக் குறைவால் பாதிக்கப் பட்டுள்ள அருண் ஜேட்லியின் தற்போதைய தோற்றம்….

கடந்த 18 மாதங்களாக எனக்கு உடல் நிலை சரியில்லை. இதனால் மருத்துவர்கள் என்னை ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்! நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் எனக்கு அளிக்கப்பட்ட பணிகளை செவ்வனே செய்து முடித்தேன். இதன் பிறகு, நீங்கள் கேதார்நாத்திலிருந்து வந்தவுடன் உங்களை சந்தித்து எனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என வாய்மொழியாக தெரிவித்தேன்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

இதன் மூலம் எனது உடல்நிலையில் கவனம் செலுத்தவுள்ளேன். உங்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றுள்ளது. நாளை புதிய அமைச்சரவை பதவியேற்கிறது. இந்நிலையில் எனது உடல்நிலையை கவனிக்க நான் நேரம் ஒதுக்க வேண்டும் என்பதால் எனக்கு மீண்டும் எந்தவொரு பொறுப்பும் வழங்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

மற்றபடி கட்சிக்கும் ஆட்சிக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வெளியிலிருந்து செய்ய தயார் என அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அருண் ஜேட்லியின் கடிதம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அமைச்சரவையைத் தேர்வு செய்வது, பிரதமர் மற்றும் அமித்ஷாவின் பணி. அமைச்சராக அருண் ஜேட்லியைத் தேர்வு செய்வதே உறுதியாகாத நிலையில், தானாகவே முந்திக் கொண்டு எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொல்வது, அவர் ஏதோ ப்ளாக் மெயில் செய்வதையே வெளிக்காட்டுகிறது. உடல்நலம் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், அமைச்சராகப் பதவி ஏற்கிறீர்களா என்று அருண் ஜேட்லியிடம் கேட்டு அதற்கு அவர் கௌரவமாக மறுத்தால் அதை ஏற்கலாம். ஆனால், முந்திரிக் கொட்டைத்தனமாக, தாமே முன்வந்து, எனக்கு அமைச்சர் பதவி எல்லாம் வேண்டாம் என்று சொல்வது, மத்தியை அமைச்சரவையை தேர்வு செய்யும் மோதியை அவமதிப்பது போலானதுதான்! என்கின்றனர்.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

இந்நிலையில், அருண் ஜேட்லி பெயரில் வெளியான கடிதத்தில் அருண் ஜேட்லியின் கையெழுத்து இல்லை என்றும், இது அவர் வெளியிட்ட கடிதம் தான் என்பதை எப்படி நம்புவது என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories