முஸ்லிம்களை சம உரிமை கொண்டவர்களாக நடத்துங்கள். வாடகைக்கு குடியேறியவர்களை போல் நடத்தாதீா்கள் .ஓவேசி…!

ovise - 2026

பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தது பற்றி முஸ்லிம்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டரீதியான சுதந்திரம் உறுதி செய்யப்படும் என இஸ்லாமிய அமைப்பின் தலைவரும் எம்.பி.,யுமான அசாதுதீன் ஓவேசி பேசி உள்ளார்.

பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்து, எதிர்த்து வந்தவர் ஓவேசி. இவர் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஐதராபாத் தொகுதியில் இருந்து 4வது முறையாக எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு ஐதராபாத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய ஓவேசி, மோடி கோயிலுக்கு போனால், நாம் மசூதிக்கு போவோம். மோடி குகைக்கு சென்று அமர்ந்தால், இஸ்லாமியர்களாகிய நாம் மசூதியில் தொழுகை நடத்துவதை நினைத்து பெருமைபடுவோம்.

300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றது பெரிய விஷயம் அல்ல. ஏனெனில் இந்தியாவில் அரசியலைப்பு சட்டம் செயல்பாட்டில் உள்ளது.

பா.ஜ., பெற்ற 300 இடங்களைக் கொண்டு எங்களின் உரிமைகளை பறிக்க முடியாது.

இந்திய சட்டம், அரசியலமைப்பின் படி நாங்கள் எங்களின் மதத்தை பின்பற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களை சம உரிமை கொண்டவர்களாக நடத்துங்கள். வாடகைக்கு குடியேறியவர்களை போல் நடத்தாதீர்கள்.
300 இடங்களை வென்று விட்டதால் நாட்டின் பிரதமர் அவர் விரும்பிய எதை வேண்டுமானாலும் செய்யலாம் என சிலர் நினைக்கலாம். ஆனால் அது நடக்காது.

ஓவேசி இந்தியாவிற்காக போராடுவான் என்ற உறுதியை நான் அளிக்கிறேன் என்றார்.

தொடர்ந்து இலங்கை தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து பேசிய அவர், வழிபாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதையும், 40 அப்பாவி குழந்தைகள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டவர்களை கொன்றதையும் ஏற்க முடியாது.

இஸ்லாமில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றவர்கள் சாத்தானின் போதனைகளை பின்பற்றுகிறார்கள். இஸ்லாமை அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories