முஸ்லிம்களை சம உரிமை கொண்டவர்களாக நடத்துங்கள். வாடகைக்கு குடியேறியவர்களை போல் நடத்தாதீா்கள் .ஓவேசி…!

ovise - 2026

பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தது பற்றி முஸ்லிம்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டரீதியான சுதந்திரம் உறுதி செய்யப்படும் என இஸ்லாமிய அமைப்பின் தலைவரும் எம்.பி.,யுமான அசாதுதீன் ஓவேசி பேசி உள்ளார்.

பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்து, எதிர்த்து வந்தவர் ஓவேசி. இவர் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஐதராபாத் தொகுதியில் இருந்து 4வது முறையாக எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு ஐதராபாத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய ஓவேசி, மோடி கோயிலுக்கு போனால், நாம் மசூதிக்கு போவோம். மோடி குகைக்கு சென்று அமர்ந்தால், இஸ்லாமியர்களாகிய நாம் மசூதியில் தொழுகை நடத்துவதை நினைத்து பெருமைபடுவோம்.

300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றது பெரிய விஷயம் அல்ல. ஏனெனில் இந்தியாவில் அரசியலைப்பு சட்டம் செயல்பாட்டில் உள்ளது.

பா.ஜ., பெற்ற 300 இடங்களைக் கொண்டு எங்களின் உரிமைகளை பறிக்க முடியாது.

இந்திய சட்டம், அரசியலமைப்பின் படி நாங்கள் எங்களின் மதத்தை பின்பற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களை சம உரிமை கொண்டவர்களாக நடத்துங்கள். வாடகைக்கு குடியேறியவர்களை போல் நடத்தாதீர்கள்.
300 இடங்களை வென்று விட்டதால் நாட்டின் பிரதமர் அவர் விரும்பிய எதை வேண்டுமானாலும் செய்யலாம் என சிலர் நினைக்கலாம். ஆனால் அது நடக்காது.

ஓவேசி இந்தியாவிற்காக போராடுவான் என்ற உறுதியை நான் அளிக்கிறேன் என்றார்.

தொடர்ந்து இலங்கை தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து பேசிய அவர், வழிபாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதையும், 40 அப்பாவி குழந்தைகள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டவர்களை கொன்றதையும் ஏற்க முடியாது.

இஸ்லாமில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றவர்கள் சாத்தானின் போதனைகளை பின்பற்றுகிறார்கள். இஸ்லாமை அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories