உயிரி எரிபொருளுடன் குடியரசு தின விழாவில் பங்கேற்கிறது An-32 விமானம்!

Published:

An32roh - 2026

இந்த வருட குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் போது உயிரி எரிபொருள் நிரப்பப்பட்ட An-32 விமானத்தை பறக்க வைக்க உள்ளது விமானப்படை.

குடியரசு தினத்தின் போது வானில் விமானப் படை விமானங்கள் பறந்து சாகச நிகழ்ச்சியை நடத்துவது முக்கியமான கண்கவர் நிகழ்ச்சி. இது இந்தியாவின் ராணுவ வலிமையை பறைசாற்றுவதாய் அமைகிறது.

விமானப்படையின் எரிபொருள் கொள்முதலை 10% வரை குறைக்கும் முயற்சியில் விமானப்படை தனது An-32 விமானத்தை உயிரி எரிபொருள் கொண்டு பறக்க வைத்து சாதனை படைத்தது.

சண்டிகர் விமான தளத்தில் நடைபெற்ற இந்த சோதனையில் விமானம் 45 நிமிடம் வானில் பறந்தது. அதாவது விமானம் 10% உயிரி எரிபொருள் மற்றும் 90% ஏவியேசன் டர்பைன் எரிபொருளை பயன்படுத்தி பறந்தது.

எரிபொருள் சேமிப்பு மட்டுமல்லாமல் கார்பன் வெளியீட்டையும் உயிரி எரிபொருள் பயன்பாடு குறைக்கும். இந்த விமானம் தற்போது குடியரசு தினவிழாவில் உயிரி எரிபொருளுடன் பறக்கவுள்ளது குறிப்பிடத் தக்கது.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img