தில்லி மெட்ரோ.. திவால் ஆகிடும் – மோடிக்கு கடிதம் எழுதிய மெட்ரோமேன் ஸ்ரீதரனுக்கு ஆம்ஆத்மி பதில்!

sridharan kejriwal - 2026

‘தில்லி மெட்ரோவில் பெண்கள், இலவச பயணம் செய்யும் திட்டம் சரியானது அல்ல; இதனால் தில்லி மெட்ரோ திவாலாகிவிடும். எனவே இதற்கு பிரதமர் ஒப்புதல் அளிக்கக் கூடாது” என்று மெட்ரோமேன் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன் கடிதம் எழுதியுள்ளார்.

தில்லியில் இயக்கப்படும் அரசு பஸ்கள், மெட்ரோ ரயில்களில் பெண்கள் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் விரைவில் அறிமுகப் படுத்தப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த 2-ஆம் தேதி அறிவித்தார்.

இந்தப் பயணத் திட்டம் குறித்து இந்திய பொறியியல் துறையில் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரியும் பல்வேறு மெட்ரோ ரயில் திட்டங்களின் ஆலோசகராக செயல்பட்டவருமான ஸ்ரீதரன் எதிர்ப்பு தெரிவித்துளார்.

அவர் இது குறித்து பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், தில்லி மெட்ரோவில் பெண்களை இலவசமாக பயணிக்க அனுமதி அளித்தால், DMRC திவாலாக நேரிடும்.

இலவச பயணத்தித்கு ஒரு போதும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது தில்லி மெட்ரோ என்பது, தில்லி மாநில அரசு மற்றும் இந்திய அரசு இரண்டின் ஒருங்கிணைந்த கூட்டு நிர்வாகம். இதில், ஒரு நிர்வாகம் தனிப்பட்ட வகையில் இவ்வாறு இலவசம் என்று கொள்கை முடிவு எடுத்து, தில்லி மெட்ரோவை திவால் ஆக்க வைக்க முடியாது…

தில்லி முதல்வர் அறிவித்துள்ள இலவச மெட்ரோ பயண திட்டம் சரியானது அல்ல. இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தால் மெட்ரோ ரயில் திவாலாகிவிடும். இதற்கு பிரதமர் ஒப்புதல் அளிக்க கூடாது… என்று அந்தக் கடிதத்தில் வற்புறுத்தியுள்ளார் ஸ்ரீதரன்.

அவருக்கு பதிலளிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சியின் துணை முதல்வர் மனீஷ் சிஷோடியா எழுதியுள்ள கடிதத்தில், ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் ஒருமுறை கூட தில்லி மெட்ரோ நிர்வாகத்தின் செயல்பாடுகளில் அரசு தலையிட்டதில்லை.

தில்லியில் பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தவே இலவச பயணத்திட்டம், திட்டத்தை எதிர்க்காமல் எங்களை ஆசிர்வதித்திக்க வேண்டும்.
என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

letter to sridharan aap - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories