திருப்பதியில் தமிழக பக்தரை கண்மூடித் தனமாகத் தாக்கிய 6 போலீஸார் இடமாற்றம்!

tirupati alipiri fight - 2026

திருப்பதி அலிபிரி சோதனைச் சாவடி அருகே, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டில்லிபாபு என்ற பக்தரை சோதனை என்ற பெயரில் கன்மூடித்தனமாக தாக்கிய போலீசார் 6 பேர் இடமாற்றம் செய்யப் பட்டனர்.

செங்கல்பட்டை சேர்ந்த 45 பேர் திருப்பதி மலையில் நாளை நடை பெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக திருப்பதி மலைக்கு வந்திருந்தனர்.அவர்கள் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் போது மலை அடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் அவர்களது உடைமைகள்,பைகள் ஆகியவற்றை தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்கள் சோதனை செய்தனர்.

அப்போது செங்கல்பட்டு பக்தர் ஒருவரின் பையில் குட்கா பாக்கெட் ஒன்று இருந்ததாக கூறப்படும் நிலையில் அவருக்கும் விஜிலென்ஸ் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது விஜிலென்ஸ் ஊழியர் அந்த பக்தரை மரியாதை குறைவாக பேசினார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே தீவிர வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் விஜிலென்ஸ் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து அந்த பக்தர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

விஜிலன்ஸ் ஊழியர்களின் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டு அதிர்ச்சி அடைந்த செங்கல்பட்டை சேர்ந்த பெண் பக்தர்கள் அவரை விட்டுவிடும்படி கெஞ்சிக் கேட்டு மன்றாடினர். ஆனாலும் விஜிலென்ஸ் ஊழியர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை.

தற்போது தாக்குதலுக்கு உள்ளான பக்தரை தங்கள் கட்டுப்பாட்டில் விஜிலன்ஸ் துறையினர் வைத்துள்ளனர். இந்த நிலையில் தமிழக பக்தர்கள் தாக்கிய விஜிலன்ஸ் ஊழியர்களை கூண்டோடு பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்துள்ளது.

திருப்பதி மலையில் பான் பராக், குட்கா,புகையிலை பொருட்கள், பீடி, சீக்ரெட், மது, மாமிசம் ஆகியவற்றை பயன்படுத்த தடை அமலில் உள்ளது. ஆனாலும் பக்தர்கள் சிலர் திருப்பதி மலையில் தடை அமலில் இருப்பது தெரியாமல் அவற்றைக் கொண்டு வருகின்றனர்.

மலையடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் சோதனை நடத்தும்போது பக்தர்களிடம் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இருந்தால் அவற்றை கைப்பற்றுவது மட்டுமே நடைமுறையில் உள்ள வழக்கம். ஆனால் இந்த சம்பவத்தில் விஜிலென்ஸ் கட்டுப்பாட்டில் செயல்படும் சிறப்பு பாதுகாப்பு படையினர் பக்தர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதற்கு கடும் கண்டனங்கள் வலுத்துள்ளன.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

டில்லிபாபுவை சிறப்பு அதிரடிப்படையினர் தாக்கிய வீடியோ, வைரலானது. இதை அடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக 6 போலீசாரை இடமாற்றம் செய்து திருப்பதி எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories