எதிர்மறை பிரசாரம்; டைம்ஸ் குழுமம், தி ஹிந்து, டெலிகிராஃப் இதழ்களுக்கு அரசு விளம்பரம் நிறுத்தம்!

advertisements - 2026

#டைம்ஸ்_குழுமத்திற்கும் #திஹிந்துவுக்கும் #டெலிகிராஃப் இதழுக்கும் மத்திய அரசு விளம்பரங்கள் நிறுத்தப் பட்டுள்ளன.

பாஜக., தலைமையிலான மத்திய மோடி அரசு முதல் கட்டமாக, முக்கிய செய்தித் தாள்களான டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி ஹிந்து, எகனாமிக்ஸ் டைம்ஸ், தி டெலிகிராஃப், ஆனந்த பஜார் பத்ரிகா (ஏபிபி) ஆகியவற்றுக்கான அரசு விளம்பரங்களை நிறுத்தியுள்ளது. அரசின் திட்டங்கள் குறித்து எதிர்மறையிலான செய்திகளைக் கொடுத்து அரசின் திட்டங்களை மக்களிடம் தவறான முறையில் சேர்ப்பதால் இந்த நடவடிக்கை என்று கூறப் படுகிறது.

அரசின் திட்டங்களை தவறாகக் கொண்டு சேர்ப்பவர்களுக்கு எதற்காக அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தும் வகையில் அரசு விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

முன்னதாக ரபேல் போர் விமானங்கள் குறித்த உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டதற்காக மார்ச் மாதம் முதலே தி ஹிந்துவுக்கு அரசு விளம்பரங்கள் நிறுத்தப் பட்டு விட்டதாகக் கூறப் படுகிறது. அதுபோல் சமீர் விநீத் ஜெயின் சகோதரர்களின் தி டைம்ஸ் குழுமத்துக்கும் ஜூன் மாதம் முதல் அரசு விளம்பரங்கள் நிறுத்தப் பட்டுள்ளதாம்.

இந்தக் குழுமங்களின் டிவி சேனல்களான டைம்ஸ் நவ், மிரர் நவ் ஆகியவையும், தேர்தல் நேரத்தின் போது, காங்கிரஸ் சார்பாக பிரசாரம் மேற்கொண்டதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக., புகார் கூறியிருந்தது.

பத்திரிகை விளம்பர உலக கணக்கின் படி, டைம்ஸ் குழுமம் மாதத்துக்கு ரூ.15 கோடி அளவிலான அரசு விளம்பரத்தை பெற்று வந்தது. தி ஹிந்து குழுமம் மாதம் தோறும் ரூ.4 கோடி அளவிலான அரசு விளம்பரங்களைப் பெற்று வந்தது.

இந்த விவகாரத்தில் இரு ஊடகக் குழுமங்களும் அமைதியாக இருந்த போதும், இது குறித்து புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி. இது ஊடக சுதந்திரத்தை நசுக்குவதாக அவர் மோடி அரசு மீது குற்றம் சாட்டினார். அரசு விளம்பரங்களை வெளியிடும் டிஏவிபி மீது அவர் குற்றம் சாட்டினார்.

நேரடியாக மக்களை தொடர்பு கொள்ள முடியக் கூடிய அரசுக்கு, இந்தப் பத்திரிகைகள் இல்லாமல் வேறு பல ஊடகங்கள் மக்கள் தொடர்பில் இருக்கும்போது, எதற்காக அரசின் திட்டங்களை எதிர்மறை கண்ணோட்டத்தில் கொண்டு சேர்ப்பதற்காக அரசின் பணம் செலவழிக்கப் பட வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர் பாஜக., ஆதரவாளர்கள்.

திட்டமிட்டு பொய்ப் பிரசாரம் செய்யும் இவர்களுக்கான விளம்பரங்களை நிறுத்துவது வரவேற்கத்தக்கதே என்று கருத்து தெரிவிக்கின்றனர் பாஜக.,வினர். மேலும், தமிழகத்திலும் இது போன்று அச்சு, காட்சி ஊடகங்களைப் பட்டியலிட்டு மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றனர்!

1 COMMENT

  1. மிக தாமத செயல் தமிழ் நாள் இதழ் சிலவற்றிக்கும் செய்யவேண்டும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories