எதிர்மறை பிரசாரம்; டைம்ஸ் குழுமம், தி ஹிந்து, டெலிகிராஃப் இதழ்களுக்கு அரசு விளம்பரம் நிறுத்தம்!

advertisements - 2026

#டைம்ஸ்_குழுமத்திற்கும் #திஹிந்துவுக்கும் #டெலிகிராஃப் இதழுக்கும் மத்திய அரசு விளம்பரங்கள் நிறுத்தப் பட்டுள்ளன.

பாஜக., தலைமையிலான மத்திய மோடி அரசு முதல் கட்டமாக, முக்கிய செய்தித் தாள்களான டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி ஹிந்து, எகனாமிக்ஸ் டைம்ஸ், தி டெலிகிராஃப், ஆனந்த பஜார் பத்ரிகா (ஏபிபி) ஆகியவற்றுக்கான அரசு விளம்பரங்களை நிறுத்தியுள்ளது. அரசின் திட்டங்கள் குறித்து எதிர்மறையிலான செய்திகளைக் கொடுத்து அரசின் திட்டங்களை மக்களிடம் தவறான முறையில் சேர்ப்பதால் இந்த நடவடிக்கை என்று கூறப் படுகிறது.

அரசின் திட்டங்களை தவறாகக் கொண்டு சேர்ப்பவர்களுக்கு எதற்காக அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தும் வகையில் அரசு விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

முன்னதாக ரபேல் போர் விமானங்கள் குறித்த உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டதற்காக மார்ச் மாதம் முதலே தி ஹிந்துவுக்கு அரசு விளம்பரங்கள் நிறுத்தப் பட்டு விட்டதாகக் கூறப் படுகிறது. அதுபோல் சமீர் விநீத் ஜெயின் சகோதரர்களின் தி டைம்ஸ் குழுமத்துக்கும் ஜூன் மாதம் முதல் அரசு விளம்பரங்கள் நிறுத்தப் பட்டுள்ளதாம்.

இந்தக் குழுமங்களின் டிவி சேனல்களான டைம்ஸ் நவ், மிரர் நவ் ஆகியவையும், தேர்தல் நேரத்தின் போது, காங்கிரஸ் சார்பாக பிரசாரம் மேற்கொண்டதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக., புகார் கூறியிருந்தது.

பத்திரிகை விளம்பர உலக கணக்கின் படி, டைம்ஸ் குழுமம் மாதத்துக்கு ரூ.15 கோடி அளவிலான அரசு விளம்பரத்தை பெற்று வந்தது. தி ஹிந்து குழுமம் மாதம் தோறும் ரூ.4 கோடி அளவிலான அரசு விளம்பரங்களைப் பெற்று வந்தது.

இந்த விவகாரத்தில் இரு ஊடகக் குழுமங்களும் அமைதியாக இருந்த போதும், இது குறித்து புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி. இது ஊடக சுதந்திரத்தை நசுக்குவதாக அவர் மோடி அரசு மீது குற்றம் சாட்டினார். அரசு விளம்பரங்களை வெளியிடும் டிஏவிபி மீது அவர் குற்றம் சாட்டினார்.

நேரடியாக மக்களை தொடர்பு கொள்ள முடியக் கூடிய அரசுக்கு, இந்தப் பத்திரிகைகள் இல்லாமல் வேறு பல ஊடகங்கள் மக்கள் தொடர்பில் இருக்கும்போது, எதற்காக அரசின் திட்டங்களை எதிர்மறை கண்ணோட்டத்தில் கொண்டு சேர்ப்பதற்காக அரசின் பணம் செலவழிக்கப் பட வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர் பாஜக., ஆதரவாளர்கள்.

திட்டமிட்டு பொய்ப் பிரசாரம் செய்யும் இவர்களுக்கான விளம்பரங்களை நிறுத்துவது வரவேற்கத்தக்கதே என்று கருத்து தெரிவிக்கின்றனர் பாஜக.,வினர். மேலும், தமிழகத்திலும் இது போன்று அச்சு, காட்சி ஊடகங்களைப் பட்டியலிட்டு மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றனர்!

1 COMMENT

  1. மிக தாமத செயல் தமிழ் நாள் இதழ் சிலவற்றிக்கும் செய்யவேண்டும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories