கழுத்தளவு வெள்ளம் ! மீட்கப்பட்ட ஒன்றரை வயது பெண்குழந்தை ! பரபரப்பு காணொளி காட்சிகள் !

save child1 - 2026கடந்த சில நாள்களாகக் குஜராத் மாநிலம் தொடர் கனமழையால்  பாதிப்பினை அடைந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினரும் காவல்துறையும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். தண்ணீர் சூழும் ஆபத்து இருக்கும் பகுதிகளுக்கு முன்னதாகவே சென்று, அங்கு இருக்கும் மக்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லும் பணியும் நடைபெற்றுவருகிறது.

நேற்று காலை வரை பெய்த கனமழையால் ,வதோத்ராவின் தேவிபுரா கிராமம் நீரில் மூழ்கியது. நீரின் அளவு அதிகமானதால், அங்கு இருக்கும் மக்களை மீட்க காவல்துறை படை சென்றது. ஆனால், அப்போது கழுத்தளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
save child - 2026காவல்துறை அங்கே கயறு கட்டி, அதைப் பிடித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அங்குள்ள மக்களுக்கு உதவினர். அப்போது, ஒரு வீட்டில் ஒரு தாயும் ஒன்றரை மாத பெண்குழந்தையும் சிக்கியிருப்பது சப் – இன்ஸ்பெக்டர் கோவிந்த் சவ்டாவுக்குத் தெரிய வர, அந்த வீட்டை நோக்கி சென்றார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

அதன் பின்னர் நடந்ததை அவரே கூறுகிறார். தேவிபுரா பகுதியில், நானும் எனது டீமும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டோம். ஒரு பெண் குழந்தையும் அவரது தாயும் வீட்டில் சிக்கியிருப்பதை அறிந்து அங்கு சென்றேன். கைக்குழந்தையாக இருந்ததாலும் கழுத்தளவு தண்ணீர் ஓடுவதாலும், அவரை கையில் எடுக்க முடியாது.

அதனால், அந்தத் தாயிடம் வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் டப் ஒன்றைக் கேட்டேன். அதில் கொஞ்சம் துணிகளைப் போட்டு, குழந்தையைப் பத்திரமாக அதில் வைத்து, தலையில் வைத்துப் பிடித்துக்கொண்டு வந்தேன் என ஒரு ஊடகத்தில் அவர் தெரிவித்துள்ளார். சுமார் ஒன்றரை கிலோ மீட்டருக்கு ஓடும் நீரில், அந்த பச்சிளம் குழந்தையைச் சுமந்து வந்திருக்கிறார் இந்த சப்-இன்ஸ்பெக்டர். குழந்தையின் தாயும் பத்திரமாக மீட்கப்பட்டார்.

Proud of the humanitarian work of this cop in Vadodara. Great courage & dedication. Rescued the baby & family. #VadodaraRains #sdrf #NDRF @GujaratPolice @IPS_Association pic.twitter.com/wWEVcJu3Ho

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

— Dr. Shamsher Singh IPS (@Shamsher_IPS) August 1, 2019

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

Topics

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories