கழுத்தளவு வெள்ளம் ! மீட்கப்பட்ட ஒன்றரை வயது பெண்குழந்தை ! பரபரப்பு காணொளி காட்சிகள் !

save child1 - 2026கடந்த சில நாள்களாகக் குஜராத் மாநிலம் தொடர் கனமழையால்  பாதிப்பினை அடைந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினரும் காவல்துறையும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். தண்ணீர் சூழும் ஆபத்து இருக்கும் பகுதிகளுக்கு முன்னதாகவே சென்று, அங்கு இருக்கும் மக்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லும் பணியும் நடைபெற்றுவருகிறது.

நேற்று காலை வரை பெய்த கனமழையால் ,வதோத்ராவின் தேவிபுரா கிராமம் நீரில் மூழ்கியது. நீரின் அளவு அதிகமானதால், அங்கு இருக்கும் மக்களை மீட்க காவல்துறை படை சென்றது. ஆனால், அப்போது கழுத்தளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
save child - 2026காவல்துறை அங்கே கயறு கட்டி, அதைப் பிடித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அங்குள்ள மக்களுக்கு உதவினர். அப்போது, ஒரு வீட்டில் ஒரு தாயும் ஒன்றரை மாத பெண்குழந்தையும் சிக்கியிருப்பது சப் – இன்ஸ்பெக்டர் கோவிந்த் சவ்டாவுக்குத் தெரிய வர, அந்த வீட்டை நோக்கி சென்றார்.

அதன் பின்னர் நடந்ததை அவரே கூறுகிறார். தேவிபுரா பகுதியில், நானும் எனது டீமும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டோம். ஒரு பெண் குழந்தையும் அவரது தாயும் வீட்டில் சிக்கியிருப்பதை அறிந்து அங்கு சென்றேன். கைக்குழந்தையாக இருந்ததாலும் கழுத்தளவு தண்ணீர் ஓடுவதாலும், அவரை கையில் எடுக்க முடியாது.

அதனால், அந்தத் தாயிடம் வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் டப் ஒன்றைக் கேட்டேன். அதில் கொஞ்சம் துணிகளைப் போட்டு, குழந்தையைப் பத்திரமாக அதில் வைத்து, தலையில் வைத்துப் பிடித்துக்கொண்டு வந்தேன் என ஒரு ஊடகத்தில் அவர் தெரிவித்துள்ளார். சுமார் ஒன்றரை கிலோ மீட்டருக்கு ஓடும் நீரில், அந்த பச்சிளம் குழந்தையைச் சுமந்து வந்திருக்கிறார் இந்த சப்-இன்ஸ்பெக்டர். குழந்தையின் தாயும் பத்திரமாக மீட்கப்பட்டார்.

Proud of the humanitarian work of this cop in Vadodara. Great courage & dedication. Rescued the baby & family. #VadodaraRains #sdrf #NDRF @GujaratPolice @IPS_Association pic.twitter.com/wWEVcJu3Ho

— Dr. Shamsher Singh IPS (@Shamsher_IPS) August 1, 2019

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories