திருவனந்தபுரம்: கேரளத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சனிக்கிழமை இன்று வருகிறார். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அவரது குடும்பத்தினரும் உச்சபூஜை முடிந்த பின்னர் ஸ்வாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குருவாயூர் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. இலங்கையில் பொதுத் தேர்தல் நடைபெறும் முன்பு ரணில் விக்கிரமசிங்க குருவாயூர் வந்து சென்றார். இப்போது அவர் இலங்கையில் பிரதமராக உள்ளார். பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக குருவாயூருக்கு அவர் வருகை தருகிறார். ரணில் வருகையையொட்டி கேரளத்திலும் குறிப்பாக குருவாயூரிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குருவாயூரில் ரணில் விக்ரமசிங்க: சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari