காவிரி நதி நீர் விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்!

காவிரி நதி நீர் விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

தமிழ்நாடு-கர்நாடகம் இடையிலான காவிரி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி கர்நாடக அரசு ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டுக்கு தண்ணீரை காவிரியில் இருந்து திறந்து விடவேண்டும். இந்த ஆண்டு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட மறுத்ததால் அதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழகத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் வாழு வாழவிடு என்ற அடிப்படையில் உதவ வேண்டும் என்று கர்நாடகத்துக்கு உத்தரவிட்டனர். மேலும், கர்நாடக அரசு காவிரியில் இருந்து நாள்தோறும் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்திரவிட்டனர்.

இந்த தீர்ப்பு வெளிவந்த உடன் உடனடியாக கர்நாடக முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டினார். உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் முழுவதும் போராட்டங்களும், மாண்டியா, மைசூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முழுஅடைப்பு போராட்டமும் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போராட்டங்களினால் இரு மாநிலங்களுக்கிடையே செல்லும் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் அனைத்தும் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த தொடர் போராட்டங்களினால் கர்நாடகத் தமிழர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனே தமிழக அரசு கூட்ட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

(ஒப்பம்)எம்.எச்.ஜவாஹிருல்லா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories