தமிழகத்தில் மேலும் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

Published:

தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 8 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

சென்னை மாவட்ட ஆட்சியராக பி.மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் எம்.வாட்நேரே நியமிக்கப்பட்டு உள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக டாக்டர் எல்.

சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்

கடலூர் மாவட்ட ஆட்சியராக டி.பி.ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்

கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஞானசேகரன் கூட்டுறவு சங்க பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை மாநகராட்சியின் தெற்கு மண்டல துணை ஆணையராக (கல்வி) கோபால சுந்தர்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்

பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக மந்த்ரி கோவிந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

குடிநீர், வழங்கல் கழிவு நீரகற்ற மேலாண்மை வாரிய துணை இயக்குநராக ஜெயச்சந்திர பானு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

Related articles

Recent articles

spot_img