December 5, 2025, 11:51 PM
26.6 C
Chennai

பசுமைப் பிள்ளையார்..!விதை விநாயகர் சிலை விற்பனைக்கு ஹெச்.ராஜா வரவேற்பு!

green vinayaka - 2025

தமிழகத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதை விநாயகர் சிலைக்கு வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புது முயற்சியாக விதை விநாயகர் சிலை விற்பனையை தமிழக தோட்டக்கலைத்துறை துவக்கியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்.2ம் தேதி கொண்டாடப்படுகிறது! இதை ஒட்டி வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபடுகின்றனர்.

vithai vinayagar - 2025

கோவில்கள் மற்றும் பொது இடங்களில் பெரிய அளவில் விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபடுவது வழக்கம். வழிபாடு முடிந்ததும் இந்தச் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றன! இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு தோட்டக்கலைத் துறையினர் புது முயற்சியாக விநாயகர் சிலை விற்பனையை தொடங்கியுள்ளனர்.

வெண்டைக்காய் மற்றும் கொத்தவரை உள்ளிட்ட விதைகளை வைத்து களிமண்ணால் விதை விநாயகர் சிலை செய்யப்பட்டுள்ளது. சிறு தொட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவற்றை வாங்கி சென்று பூஜை செய்த பிறகு தொட்டியில் நீரை ஊற்றி சிலையை கரைத்துவிடலாம்.

vidhaivinayakar - 2025

சிலையில் வைக்கப்பட்டுள்ள வெண்டைக்காய் மற்றும் கொத்தவரை போன்ற காய்கறி செடிகள் வளர்ந்து வீட்டுக்கும் பயன் தரும். புது முயற்சியாக தோட்டக்கலை துறையினர் விநாயகர் சிலைகளின் விற்பனையை தொடங்கி உள்ளனர்.

சென்னை மாதவரம் தோட்டக்கலை பூங்கா சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள தோட்டக்கலைத் துறை இயக்குனர் அலுவலகம், தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா உள்ளிட்ட இடங்களில் இந்த சிலைகள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, வீட்டுக்கு காய்கறி தரும் என்பதால் விதை விநாயகர் சிலைக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. எழிலகம் வளாகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் இந்த சிலைகளை நேற்று ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹெச். ராஜா, இந்த விதை விநாயகர் சிலை விற்பனைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்

பசுமைப் பிள்ளையார்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories