கமல் பிறந்த நாளில் உதயமாகும் தொலைக்காட்சி! மக்கள் நீதி மய்ய தேர்தல் பிரசார துவக்கம்!

kamal - 2026

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைக் கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதியில் தொடங்க இருப்பதாக தெரிகிறது.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை வரும் நவம்பர் மாதமே தொடங்கவுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

அதிமுக அமைச்சர்களை தொடர்ந்து விமர்சித்து வந்த நடிகர் கமல்ஹாசன், அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார். அதன்படி 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி மதுரையில் நடந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். முதலில் அதிமுகவை விமர்சித்து வந்த கமல்ஹாசன், அதன்பின்னர் திமுகவையும் விமர்சித்து தூள்கிளப்பினார்.

KAMAL - 2026

முதல்முறையாக மக்களவைத் தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மய்யம், பெரும்பாலான இடங்களில் கணிசமான வாக்குகளைப் பெற்றது. பல இடங்களில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது. எதிர்பார்த்ததை விட அதிக ஆதரவு கிடைத்திருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.

இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி மக்கள் நீதி மய்யத்தில் கட்டமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

kamal 1 - 2026

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் புதிய கட்டமைப்புகள் குறித்து விளக்கக் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 30) பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் நடைபெற்றது. இதில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் கலந்துகொண்டு பேசினார்.

ALSO READ:  தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மகேந்திரன், “அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான பலம் மக்கள் நீதி மய்யத்திற்கு உள்ளது என்பதை மக்களவைத் தேர்தலில் நிரூபித்துள்ளோம்.

kamalkas - 2026

அடுத்த இலக்கு 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றுவதுதான். சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்டப் பிரச்சாரத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரும் நவம்பர் 7ஆம் தேதி தொடங்கவுள்ளார். தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்திற்காக பெரிய அளவிலான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.

மேலும், “மக்கள் நீதி மய்யம் கட்சிக்கென புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்குவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறோம். நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு தற்போது எடுக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு அதில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றும் மகேந்திரன் குறிப்பிட்டார்.

kamal - 2026

நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றே தனது முதற்கட்ட பிரச்சாரத்தை துவங்கவும் தீர்மானித்துள்ளார் கமல்ஹாசன்.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories