நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதலே நல்ல மழை பெய்து வந்தது.
குற்றாலம் மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால், அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப் படுகிறது. இருப்பினும் சீஸன் காலம் முடிவடையும் நிலையில், சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்தே காணப் பட்டது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (04-09-2019)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 110.70 அடி
நீர் வரத்து : 2341.55 கன அடி
வெளியேற்றம் : 1404.75 கன அடி
சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 119.16 அடி
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil
மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 51.60 அடி
நீர் வரத்து : 215
கனஅடி
வெளியேற்றம் : 400 கன அடி
மழை அளவு:
பாபநாசம்: 23 மி.மீ
சேர்வலாறு: 17 மி.மீ
மணிமுத்தாறு: 1 மி.மீ
கடனா: 2 மி.மீ
கருப்பா நதி: 26 மி.மீ
குண்டாறு: 20 மி.மீ
கொடுமுடியாறு: 25 மி.மீ
அடவிநயினார்: 19 மி.மீ
அம்பாசமுத்திரம்: 1.20 மி.மீ
ஆய்குடி: 5.40 மி.மீ
ராதாபுரம்: 1.20 மி.மீ
செங்கோட்டை: 19 மி.மீ
தென்காசி: 6.40 மி.மீ