“அரசையே அலற விடுறவங்க நாங்க..!” நடிகர் விஜயின் தந்தை மிரட்டி… மோசடி!

sac - 2026

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் 20 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்து விட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அரசையே அலற விடுறவங்க நாங்க… எங்கிட்டயா என்று மிரட்டியதாகவும் கூறப் பட்டுள்ளது.

சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் மணிமாறன். சினிமா தயாரிப்பாளரான இவர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அந்தப் புகாரில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், ‘டிராபிக் ராமசாமி’ என்ற படத்தை இயக்கினார். தமிழகத்தில் இந்த படத்தை வெளியிடும் உரிமையை வெளிநாடு வாழ் இந்தியரான பிரம்மானந்தம் சுப்பிரமணியம் என்பவருக்கு வழங்கியிருந்தார்.

இதற்கு முன்பணமாக 21 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டார். அதன் பிறகு படத்தை தானே வெளியிட இருப்பதாகக் கூறி, படத்தை வெளியிடும் முன் 21 லட்ச ரூபாயை திருப்பி தந்து விடுவதாக உறுதி அளித்தார்.

ஆனால் சொன்னபடி பணம் தரவில்லை. கடந்த ஓர் ஆண்டாக இழுத்தடித்து வந்தார். இதனால் என் நண்பரான பிரம்மானந்தம் சுப்பிரமணியம் 21 லட்சம் ரூபாய் விவகாரம் குறித்து சந்திரசேகரை சந்திக்கும்படி கூறினார்.

நான் செப்டம்பர் 26-ஆம் தேதி எஸ் ஏ சந்திரசேகர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தேன். அப்போது அவர் பணம் எல்லாம் தர முடியாது; நீங்களும் பிரம்மானந்தம் சுப்பிரமணியமும் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்! நாங்கள் அரசாங்கத்தையே அலற விடுபவர்கள் என்று மிரட்டினார்.

சந்திரசேகர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories