‘மிசா’வில் மாட்டிக் கொண்ட பொன். ராதாகிருஷ்ணன்! அட சாமி… என்ன நடந்துச்சு தெரியுமா?!

pon radhakrishnan - 2026

மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை, மிசா காலத்தில் கைதானார் என்று ஒரு டிவி., பேட்டியில் பொன்முடி முன்னர் வைக்கப் பட்ட வாதம், இப்போது பலரை மிசாவுக்குள் இழுத்திருக்கிறது.

1975ம் ஆண்டும் தொடர்ந்து, மறு வருடமும் நெருக்கடி நிலை அமலில் இருந்த போது, பலர் சிறை சென்றனர். அப்படி திமுக., தலைவராகவும் முதல்வராகவும் இருந்த மு.கருணாநிதியின் மகன் ஸ்டாலினும் சிறையில் அடைக்கப் பட்டார். ஆனால் அவர் மிசா.,வின் கீழ் அடைக்கப் படவில்லை, கசமுசா செய்ததால் கைதாகி அடைக்கப் பட்டார் என்று சமூகத் தளங்களில் பல்வேறு அனுமானங்கள் உலா வருகின்றன.

குறிப்பாக, ஷா கமிஷன் அறிக்கையின் படி மிசா கைதிகளின் பட்டியலில் ஸ்டாலின் பெயர் இடம்பெறவில்லை என்பதைக் காரணம் காட்டி, அவர் மிசா காலத்தில் அடைக்கப் பட்டார், ஆனால் மிசாவின் கீழ் அடைக்கப் படவில்லை என்பதை பலரும் தெளிவாக விளக்கி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் இப்போது மிசாவில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, ஸ்டாலின் மிசாவில் சிறை சென்றது உண்மை என்று பொன்ராதாகிருஷ்ணன் சான்றிதழ் வழங்கியுள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது! இது பாஜக.,வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஸ்டாலின் மிசாவில் சிறை சென்றது தாக்கப்பட்டது உண்மை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாக வெளியான செய்தி தவறானது என்று பாஜக.,வினர் கூறுகின்றனர்.

அக்.18 வெள்ளிக்கிழமை அன்று, திருவரங்கத்தில் அம்மா மண்டபம் அருகே காந்தி ஜெயந்தி 150-ஆவது பிறந்த தின விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடைபெற்றது. இதைத் தொடங்கி வைக்க முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வந்திருந்தார்!
இந்த யாத்திரை ஸ்ரீரங்கம் வழியாக திருவானைக்காவல் நாலுகால் மண்டபத்தில் முடிவடைந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது ராஜீவ் கொலை குறித்த சீமான் பேச்சு ஏற்கமுடியாதது; என் மண்ணில் இந்த நாட்டின் தலைவராக இருந்த ஒருவரை படுகொலை செய்ததை ஒருகாலும் ஏற்க முடியாது; இதை வைத்து பெருமைப்பட சிலர் இருப்பது கண்டிக்கத்தக்கது…

ஸ்டாலின் கைது செய்யப்பட்டதையும் அவரை தாக்க முயன்ற போது நான் குறுக்கே பாய்ந்து தடுத்ததால் என் காது கேட்கும் திறனை இழந்தேன் என்று ஆற்காடு வீராசாமி பேசக் கேட்டிருக்கிறேன்.

ஸ்டாலின் சிறை சென்றது உண்மை தாக்கப்பட்டது உண்மை! ஆனால் சிட்டிபாபு கொலைக்கு காரணமானவர்களை தூக்கிக் கொண்டு திரிவதை ஏற்றுக்கொள்ள முடியாது! .. என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ள வீடியோ பதிவினை பகிர்வு செய்து, பாஜக.,வினர் இப்போது செய்திப் பிழை குறித்து விமர்சிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories