4வது முறையாக கைது செய்யப்பட்ட கருகலைப்பு போலி மருத்துவா்!

ANATHI KARU - 2026

திருவண்ணாமலையில், ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ததாக கைதாகி, ஜாமினில் வந்த போலி மருத்துவர் ஒருவர், மீண்டும் கருக்கலைப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்காலைச் சேர்ந்தவர் ஆனந்தி.

இவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.
ஆனந்தி சில மருத்துவமனைகளில் செவிலியராக வேலைபார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவர்கள் சிலரிடம் உதவியாளராக இருந்தபோது, பேன்சி ஸ்டோர் ஒன்றை துவக்கியிருந்தார்.

அந்த பேன்சி ஸ்டோரில் ரகசியமாக ஒரு அறை அமைத்து, பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்தார்.

கடந்த ஆண்டு காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்ட ஆய்வில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ததாக ஆனந்தி கைது செய்யப்பட்டதோடு, அவரது பேன்சி ஸ்டோருக்கு சீலும் வைக்கப்பட்டது.

மேலும் அவர் குண்டர் சட்டத்தில் கைதாகி சமீபத்தில்தான் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இந்நிலையில் வெளிமாவட்டங்களுக்கு சென்று ஆனந்தி மீண்டும் கருக்கலைப்பில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினர் அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

ALSO READ:  'அருந்தமிழ் 50' நூல் வெளியீடு

நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அருகே கருக்கலைப்பு செய்ய அவர் வந்துள்ளதாக காவலர்களுக்கு தகவல் கிடைக்க, அவர்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் வரும் தகவல் கிடைத்ததால் அங்கிருந்து திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்காலில் உள்ள அவரது வீட்டிற்கு தப்பிச் சென்ற ஆனந்தி, அங்கே பதுங்கி இருந்திருக்கிறார்.

இதனையடுத்து போலீசார் அவரது வீட்டில் சோதனையிட காவல்துறையினர் உள்ளே செல்ல முயன்றபோது, ஆனந்தி போலீசாரிடம் சிக்கியுள்ளார். ஏற்கனவே 3 முறை கைதான ஆனந்தி, தற்போது 4வது முறையாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியல் பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories