சென்னையில் திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட இடங்களில் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவல்லிக்கேணி, மண்ணடியில் உள்ள தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை 10.30 மணிக்கு அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.