December 7, 2025, 1:14 AM
25.6 C
Chennai

தேசிய நெடுஞ்சாலைகள் எப்போது புதுப்பிக்கப்படும்? எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள்

கடலுார்: கடலுார் முதுநகர் தேசிய நெடுஞ்சாலை ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால், அடிக்கடி 'டிராபிக் ஜாம்' ஆகி பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கடலுார் புதுநகரில் இருந்து முதுநகருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை கடந்த 2015ம் ஆண்டு பெய்த கன மழையினால் கடும் பாதிப்பிற்குள்ளானது. தண்ணீர் ஓட வழியில்லாமல் ஆங்காங்கே சாலை அரிப்பு ஏற்பட்டு பெரும் சேதம் அடைந்தது. சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வசதி அவசியம் என்பதை கடந்த வெள்ளத்தில் பாடம் கற்ற அதிகாரிகள், அவசர அவசியத்தை கருத்தில் கொண்டு கடலுார் முதுநகர் சாலையை 2 கோடி ரூபாய்க்கு 'பேட்ஜ் ஒர்க்' செய்ய டெண்டர் விடப்பட்டது. இந்த பணிகள் முடிந்த சில நாட்களிலேயே சாலைகள் மீண்டும் ஜல்லிகள் பெயர்ந்து யானை பிடிக்கும் பள்ளங்களானது.
சிதம்பரம், விருத்தாசலம் மார்க்கத்தில் இருந்து தினமும் ஏராளமான பஸ்கள், கனரக வாகனங்கள் வந்து செல்வதால் 'பேட்ஜ் ஒர்க்' சாலையால் தாக்குப்பிடிக்க முடியாமல் சாலை சேதம் அடைந்தது. சாலையில் ஏற்படும் பள்ளத்தை நிரப்புவதற்காக 'குவாரி டஸ்ட்' நிரப்பி அவ்வப்போது சரி செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த சாலையை முழுவதுமாக சீரமைக்க 18 கோடி ரூபாய் மதிப்பில் 5 கி.மீ., தார் சாலை, சாலையின் இரு பக்கமும் மழைநீர் வடிகால், 4 சிறிய அளவிலான கல்வெர்ட் பாலங்கள் அமைக்க டெண்டர் விடப்பட்டது.
அதன்படி கல்வெர்ட் பாலம் கட்டும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. அதேப்போல் பச்சையாங்குப்பம் பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் பணி நடைபெற்று வருகிறது. நகருக்குள் வடிகால் பணி நடைபெறவில்லை. காரணம், சாலையின் (பவுண்டரி) எல்லை குறித்து இன்னும் சர்வே செய்யப்படாததால் வடிகால் வாய்க்கால் கட்டுமானப்பணிகள் தாமதமாகி வருகிறது.
இதற்கிடையே கடந்த வாரம் கடலுாரில் பெய்த கனமழையால் சாலையின் பள்ளத்தில் போடப்பட்டிருந்த 'குவாரி டஸ்ட்' பவுடர் காற்றிலே பறந்து புழுதி நகரமாக காட்சி தந்தது. இதனால் சாலையோரம் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் தினம் தினம் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாலைகளில் பல இடங்களில் யானை பிடிக்கும் பள்ளங்கள் உருவானதால் வாகனங்கள் சீராக செல்ல முடியாமல் ஊர்ந்து செல்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சர்வே செய்யும் பணிகளை துரித படுத்தி சாலை போடும் பணியை விரைவாக துவங்க வேண்டு ம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories