December 7, 2025, 12:24 AM
25.6 C
Chennai

ஜனவரியில் பெய்த மழை: விவசாயிகளுக்கு பாதிப்பா?

 ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் பெய்த மழை: விவசாயிகளுக்கு இழப்பா? வரமா?
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஓரளவே மழை பெய்துள்ள நிலையில், தமிழகத்தின் மத்திய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
இந்த மழையினால் விவசாயிகளுக்கு பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதா என்று பிபிசி தமிழோசை, காவிரி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஆறுபாதி கல்யாணம் அவர்களிடம் கேட்டபோது , ''டெல்டா மாவட்டங்களில் ஆற்று நீரை பயன்படுத்தி நடக்கும் சம்பா பயிர் காலத்தில் தேவையான நீர் இல்லாததால், பெரிதாக எந்த சாகுபடியும் நடக்கவில்லை. அதே நேரத்தில் வடிமுனை குழாய்கள் மூலம் வளர்க்கப்படும் பயிர்கள் தற்போது அறுவடைக்கு வந்துள்ளன'' என்று தெரிவித்தார்.
''தற்போது இந்த சம்பா பயிர்களை நீர் சூழ்ந்துள்ளது. இவற்றை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். ஆனால், இது விரைவில் வடிந்து விடும் '' என்று தெரிவித்த ஆறுபாதி கல்யாணம், மேலும் கூறுகையில், ''ஆனால், அதே சமயத்தில் தற்போது பெய்த இந்த மழையால் நெல்லில் 22 முதல் 24 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ளது'' என்று கூறினார்.
போதுமான அரசு கொள்முதல் நிலையங்கள் இல்லாத சூழலில், தனியார் கொள்முதல் நிலையங்கள் ஈரப்பதம் உள்ள நெல்லை வாங்காது என்று விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனை பற்றி அவர் குறிப்பிட்டார்.
''கடும் கோடையையும், வறட்சியையும் விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள இந்த சூழலில், தற்போது பெய்த இந்த மழை விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் தான்'' என்று ஆறுபாதி கல்யாணம் தெரிவித்தார். ஆனால், இந்த மழை போதுமானதாக இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழை குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், ''தமிழகத்தில் குளிர்காலத்திலும் சில சமயங்களில் மழை பெய்வதுண்டு. ஆனால், இந்த ஆண்டு சற்றே அதிகமாக இது பெய்துள்ளது. பொதுவாக ஜனவரி மாதத்தில் 17 மில்லிமீட்டர் அளவு மழை பெய்வது வழக்கமாகும். ஆனால், இந்த ஆண்டு, இது வரை 38 மில்லிமீட்டர் அளவு மழை பெய்துள்ளது'' என்று தெரிவித்தார்.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது மேற்கு திசை நோக்கி சென்று விட்ட நிலையில், சென்னையில் அடுத்த மூன்று தினங்களுக்கு மழைக்கான வாய்ப்பில்லை. அதே வேளையில் தமிழகத்தின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழையே பெய்ய வாய்ப்புள்ளது எனவும், குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யாது எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
குளிர்காலமான ஜனவரி மாதத்தில் மழை பெய்வது இயற்கை தான் என்று தெரிவித்த பாலச்சந்திரன், இது போன்ற காலகட்டத்தில் மழை பெய்வதற்கு வானிலை நிகழ்வுகளில் ஏற்படும் மாற்றமும், சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றமும் தான் காரணம் என்று மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories