தென்காசி மாவட்ட தொடக்க விழாவில் எடப்பாடியார்! விழா இடத்தில் ஆட்சியர் ஆய்வு!

nellai collector shilpa prabhakar - 2026

தென்காசி புதிய மாவட்டத்தை எடப்பாடி பழனிசாமி வரும் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி வைக்கிறார். இதை அடுத்து விழா நடக்கும் இடத்தை நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பார்வையிட்டார்.

தென்காசி புதிய மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 22ஆம் தேதி வெள்ளி அன்று தொடங்கி வைக்கிறார். இந்த விழா நடக்கும் இடத்தை ஆட்சியர் ‌ஷில்பா பிரபாகர் சதீஷ் பார்வையிட்டார்.

தென்காசி புதிய மாவட்டம் :நெல்லை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக உருவாக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 18இல் அறிவித்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட வரையறை குறித்து நெல்லை ஆட்சியர் அலுவலகத்திலும், குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியிலும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய 2 வருவாய் கோட்ட அதிகாரி (ஆர்.டி.ஓ) அலுவலகங்களும், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வீரகேரளம்புதூர், சங்கரன்கோவில், திருவேங்கடம், ஆலங்குளம் ஆகிய 8 தாலுகாக்களும், கிராமங்கள் பலவும் இணைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

தென்காசி மாவட்ட முதல் ஆட்சியராக அருண்சுந்தர் தயாளனும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக சுகுணா சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!
nellai collector shilpa - 2026

இதையடுத்து தென்காசி புதிய மாவட்ட தொடக்க விழா தென்காசியில் வரும் 22-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

தென்காசியில் புதிய மாவட்ட தொடக்க விழா நடைபெறும் இடத்தை ஆட்சியர் ‌ஷில்பா, செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 21ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார். 22ஆம் தேதி காலை தூத்துக்குடியில் இருந்து காரில் தென்காசிக்கு வந்து, புதிய மாவட்ட தொடக்க விழாவில் பங்கேற்கிறார்.

விழாவில் 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப் படுகிறது. மேலும் நெல்லை மாவட்டத்தில் நடந்து முடிந்த வளர்ச்சிப் பணிகளை திறந்து வைக்கிறார்.

சுரண்டை அரசு கல்லூரிக்கு ரூ.2 கோடி செலவிலும், பாவூர்சத்திரம் ஔவையார் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.3½ கோடி செலவிலும், ஆவுடையானூர் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.2¼ கோடி செலவிலும் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அவர் திறந்து வைக்கிறார்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories