உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசியல் சூழல் குறித்து மேலும் ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். நேற்று அவர் முதல் அறிக்கையை அனுப்பியிருந்தார். இந்நிலையில் இன்று அனுப்பியுள்ள அறிக்கையில் அதிகாரிகள், காவல்துறை தந்த தகவல்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது பற்றியும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஆளுநர்.
ஆளுநர், தன்னுடைய முடிவு குறித்து அறிக்கையில் தெரிவிக்கவில்லை. எம்.எல்.ஏக்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது பற்றி காவல்துறை தந்த தகவல்களையும் குறிப்பிட்டுள்ளாராம்.


