அணி மாறும் யோசனையில் 12 அமைச்சர்கள்…

அணி மாறும் யோசனையில் 12 அமைச்சர்கள்… பெரும்பான்மையை இழக்கிறதா சசிகலா முகாம்?!*
யார் முதல்வர் என்பதில் சசிகலாவுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்குமிடையே ஏற்பட்ட அதிகார மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. சசிகலாவை முன்னின்று ஆதரித்த அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பொன்னையன், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் என அடுத்தடுத்து பன்னீர்செல்வம் முகாமுக்கு தாவி வருகிறார்கள். இதுவரை 6 எம்.எல்.ஏ.க்களும், சில எம்.பி.க்களும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இந்த பட்டியல் விரைவில் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், கே.சி.வீரமணி, நிலோபர் கபில் என 12 அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கக் கூடும் என தகவல் வெளியாக அதிர்ந்து போயுள்ளது சசிகலா தரப்பு.இதையடுத்தே கூவத்தூர் சென்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார் சசிகலா. இந்த கூட்டத்தில் சசிகலாவுக்கு நேரடியாக ஆதரவு தெரிவிப்பவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்கள் 111 பேர் தான்.
மொத்தமுள்ள 135 பேரில் 117 பேர் ஆதரவு இருந்தால் தான் ஆட்சியமைக்க முடியும். ஆரம்பத்தில் 135 பேரின் ஆதரவையும் பெற்றிருந்த சசிகலாவின் முகாமில் இருந்து இதுவரை 7 பேர் அணி மாறியுள்ளனர். எம்.எல்.ஏ.க்களில் 17 பேர் யாருக்கு ஆதரவு என்பதை முடிவு செய்யாமல் உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது இருக்கும் 111 பேரில் அமைச்சர்கள் சிலர் அணி மாறும் யோசனையில் இருப்பதால் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சசிகலா தரப்பு.
தற்போதைய நிலையில் யாருக்கு ஆதரவு என முடிவெடுக்காமல் உள்ள எம்.எல்.ஏ.க்களும், அணி மாறும் முடிவில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களும் பன்னீர்செல்வத்தை ஆதரித்தால் சசிகலா தரப்புக்கான ஆதரவு என்பது 100க்கும் குறையும் என சொல்லப்படுகிறது.
தமிழக சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. 233 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் சபாநாயகர் தவிர 232 பேர் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள். பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க 117 பேர் தேவை. அ.தி.மு.க.வில் மொத்தம் 135 சட்டமன்ற உறுப்பினர்களும், தி.மு.க.வில் 89, காங்கிரஸில் 8, முஸ்லீம் லீகில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என மொத்தம் 233 பேர் உள்ளனர்.
135 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் தனக்கு உள்ளதாக கூறி முதலில் ஆட்சியமைக்க கோரினார் சசிகலா. இது பின்னர் 131, 129 ஆக குறைந்து, இப்போது 111 ஆக மாறி இருக்கிறது. இதனால் சசிகலா தரப்புக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதே சூழலில் பன்னீர்செல்வம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமானால் 117 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். அ.தி.மு.க.வில் இருந்து 117 பேரின் ஆதரவை பெற முடியாத பட்சத்தில், பன்னீர்செல்வம் தி.மு.க., காங்கிரஸ் உதவியை நாட வேண்டும். இல்லாவிட்டால் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமலாகும்.
இருக்கும் 111 பேரை தக்க வைக்கவும், யாருக்கு ஆதரவு எனமுடிவு செய்யாத 17 பேரை தங்கள் பக்கம் இழுக்கவும் முயன்று வருகிறது சசிகலா தரப்பு. அதேபோன்று தங்கள் பக்கம் இழுக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் முயற்சித்து வருகிறது.
குதிரை பேரம் துவங்கி விட்டது. தாமதம் ஊழலுக்கு வழி வகுக்கும் என்பார்கள். இங்கே ஆளுநர் முடிவெடுப்பதில் செய்யும் தாமதம் குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories