திருமயத்தில் தீரர் சத்யமூர்த்தி சிலை திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தீரர் சத்தியமூர்த்தி சிலையை குமரிஅனந்தன் திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தீரர் சத்தியமூர்த்தி நினைவு மணிமண்டபம் ரூ 3லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா சுப்பையா தலைமையில் நடைபெற்றது.

விழாவிற்கு தீரர் சத்தியமூர்த்தி பேரன் சீனிவாசமூர்த்தி முன்னிலை வகித்தார். மணிமண்டபத்தை அழகுதேவர் அறக்கட்டளை சிந்தாமணிஅம்மாள் திறந்து வைத்தார்.

மணிமண்டபம் உள்ளே அமைக்கப்பட்டுள்ள தீரர் சத்தியமூர்த்தி சிலையை மாநில காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் இலக்கிய செல்வர் குமரிஅனந்தன் திறந்து வைத்தார். மணிமண்டப கல்வெட்டை திருமயம் சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி திறந்து வைத்தார்.

தீரர் சத்தியமூர்த்தி வாழ்க்கை வரலாறு பதாகையை முன்னாள் எம்.எல்.ஏ சுப்புராம் திறந்து வைத்தார். விழாவில் பேசிய மாநில காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் இலக்கிய செல்வர் குமரிஅனந்தன் 1936-ல் மாநில காங்கிரஸ் தலைவராக தீரர் சத்தியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயலாளராக காமராஜர் தேர்ந்தெடுக்கபடட்டார். தனது குருவான தீரர் சத்தியமூர்த்தி நினைவாக காமராஜர் சச்தியமூர்த்தி பவனை கட்டினார்.

அதை நான் (குமரிஅனந்தன்) மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் பொமுது 1996ம் ஆண்டு மூப்பனார் கைப்பற்றினார். எனது குருவான காமராஜர் கட்டி சத்தியமூர்த்தி பவனை நான் மூப்பனரோடு கைகோர்ந்து மீட்டெடுத்தேன்.

திருமயம் ஊராட்சி மன்ற அலுவலகம் , பள்ளிகளில் தீரர் சத்தியமூர்த்தி திரு உருவபடம் வைக்கவேண்டும். அப்போது தான் இளம் வயது குழந்தைகளுக்கு நம் ஊரில் பிறந்த தீரர் சத்தியமூர்த்தி பற்றி தெரிந்து கொள்வார்கள்.

தனிமனிதனாக இருந்து இந்த மணிமண்டபத்தை கட்டிய அழகு தேவர் சத்திவேல் குடும்பத்தினரை மனதார பாராட்டுகிறேன் இவ்வாறு இலக்கிய செல்வர் குமரிஅனந்தன் பேசினர்.

விழாவில் தீரர்சத்தியமூர்த்தி மணிமண்டபம் கட்ட உதவியாக இருந்த புலவர் முத்து வெங்கடேசன் உள்ளிட்ட பலருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

விழாவில் நாட்டின் விடுதலை போராட்டத்திற்காக 10 அயிரம் பவுன் தங்கம், 1000 ஏக்கா; நிலத்தை சுபாஸ் சந்திரபோஸ்யிடம் வழங்கிய ஹமீதுஹன்சா குடும்பத்தினருக்கு பொற்கிழி மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ராமசாமி, முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன், தே.மு.தி.க. மாநில துணை செயலாளர் என். ஜாகீர் உசேன் முன்னாள் எம்.எல்ஏக்கள் சுவாமிநாதன், கவிதைப்பித்தன், புஸ்பராஜ், காங்கிரஸ் பொதுச்செயலாளர் சந்திரசேகரன் திமுக ஒன்றிய செயலாளர் எம்.பி.சரவணன் தேமுதிக ஒன்றிய செயலாளர் பட்டணம் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அழகு தேவர்சத்திவேல் வருகை தந்த அனைத்து விருந்தினருக்கும் நினைவு பரிசு வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

செய்தி : ஜெயசந்திரன், புதுக்கோட்டை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories