ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் 5 துணை வங்கிகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடன் இணைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஒப்புதலை கடந்த பிப்ரவரி 16ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் ஆகிய 5 துணை வங்கிகளும் வரும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடன் இணைக்கப்படுகிறது.*
Popular Categories



