December 6, 2025, 3:54 PM
29.4 C
Chennai

நெல்லையில் வெட்டப்பட்ட கைதி மருத்துவமனையில் உயிரிழப்பு

காவல்துறை வாகனத்தை வழிமறித்து தாக்குதல்-ஜெயில் கைதி சரமாரியாக வெட்டி படுகொலை

_நெல்லை பாளையங்கோட்டை அருகே, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவரை, போலீசார் மீது மிளகாய் பொடி கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, 13 பேர் கொண்ட மர்ம கும்பல், சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது._

_நெல்லை மாவட்டம் பழையகாயல் அடுத்த புல்லாவெளி கிராமத்தை சேர்ந்தவர், சிங்காரம் என்கிற சிங்காரவேல். இவர், சுத்தமல்லி மதன் கொலை வழக்கு மற்றும் சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் கொலை வழக்கு என, பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர். பசுபதிபாண்டியன் ஆதரவாளரான சிங்காரவேல், தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்._

_இன்று இவரை வழக்கு ஒன்றுக்காக, ஆயுதப்படை எஸ்.ஐ வீரபாகு உள்ளிட்ட 4 போலீஸார், துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் ஏற்றி, தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். இவர்களது வாகனம், நெல்லை கேடிசி நகர் செக் போஸ்ட் அருகே சென்றபோது, 13 பேர் கொண்ட மர்ம நபர்கள் திடீரென வாகனத்தை மறித்து, போலீஸார் மீது மிளகாய் பொடி கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்துள்ளனர். இதை சற்றும் எதிர்பாராத காவல்துறையினர் நிலைகுலைந்த நேரத்தில், வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல், போலீஸார் வைத்திருந்த துப்பாக்கியை பறித்து, அதை செயல்படாதவண்ணம் உடைத்துள்ளனர். பின்னர், உள்ளே இருந்த கைதி சிங்காரத்தை வெளியே இழுத்துப் போட்டு, அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அடங்கிய சிங்காரம் உயிரிழந்துவிட்டதாக கருதிய மர்ம கும்பல், அங்கிருந்து சாவகாசமாக தப்பியோடிவிட்டது._

_ஆனால், சிங்காரம் உயிரோடு இருப்பதை கண்ட பொதுமக்களும் போலீஸாரும், அவரை தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், பாளையங்க்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்._ _

தகவல் அறிந்த நெல்லை மாநகர காவல் ஆணையர் திருஞானம், தாக்குதல் நடைபெற்ற இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள், சுபாஷ் பண்ணையாரின் ஆட்களாக இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீஸார், அவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்._

_துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், காவல்துறை வாகனத்தில் இருந்த கைதியை, போலீஸாரின் கண்ணில் மிளகாய் பொடி தூவி மர்ம நபர்கள் கொலை செய்த நிகழ்வு, நெல்லை மட்டுமல்லாமல் தமிழகத்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது._

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories