கார் குண்டு தாக்குதலுக்கு 40 பேர் பலி

Published:

சிரியா நாட்டில் உள்ளூர் போராளி குழுக்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை மீட்பதற்காக அந்நாட்டு அரசுப் படைகள் உச்சக்கட்ட போரில் ஈடுபட்டு வருகின்றன.

எதிரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகளை ராணுவம் மீட்டு வருகிறது.

இதற்கிடையே, துருக்கி நாட்டை சேர்ந்த புரட்சிப்படையினரும் சிரியாவில் இருந்து  ஐ.எஸ். தீவிரவாதிகளை விரட்டி அடிக்கும் நோக்கத்தில் போர் நடத்தி வருகிறார்கள்.

இருதரப்பினருக்கும் இடையில் கடந்த ஒருவார காலமாக நடைபெற்ற ஆவேசப் போரின் எதிரொலியாக ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அல்-பாப் மாநிலத்தில் இருந்து தீவிரவாதிகள் விரட்டி அடிக்கப்பட்டனர்.

அருகாமையில் உள்ள காபாசின், அல் பேஸா ஆகிய நகரங்களும் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், அல்-பாப் மாநிலத்தின் மேற்கு பகுதியான சோசியான் என்ற கிராமத்தில் துருக்கி நாட்டை சேர்ந்த ஆதரவு படைகள் மற்றும் சிரியா ராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்த ராணுவ நிலையத்தின் மீது இன்று நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 40-க்கும் அதிகமானவர்கள் உடல் சிதறி உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

காயமடைந்த பலர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img