December 6, 2025, 7:26 PM
26.8 C
Chennai

முடக்கப்பட்ட கட்சி, சின்னத்தை நான் மீட்டு வந்தேன் :ம.நடராஜன்

எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இரட்டை இலை சின்னத்தை முடக்கிய போது நான் தான் மீட்டு கொண்டு வந்தேன் என நடராஜன் பேசினார்.

மறைந்த ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழா, அ.தி.மு.க-வினரால் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாப்பட்டுவருகிறது. தஞ்சாவூரில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில், புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா நாட்டு மக்களுக்காக வாழ்ந்து இறந்து விட்டார். யானை இறந்து விட்டால் ஈ, எறும்புகளுக்கு கொண்டாட்டம் என்பார்கள். ஆலமரம் விழுந்து விட்டது.  அப்போது அவரை பார்க்காத, திட்டி,  எட்டி உதைத்தவர்கள்,  தலை முடியை பிடித்து இழுத்தவர்கள், உதவாதவர்கள் தற்போது முன்னே வருவதை தமிழகம் பார்த்து கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியது போல் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வர வேண்டும்.

எம்.ஜி.ஆர். தொடங்கிய  கட்சி, இரட்டை இலை சின்னத்தை முடக்கிய போது நான் தான் மீட்டு கொண்டு வந்தேன். எனவே அனைவரும் ஒன்று பட்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியை  பின்பற்ற வேண்டும். எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.,இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சி செய்கிறார்கள். ஜெயலலிதா புகழ் இருக்கும் வரை யாராலும், அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தை அசைக்க முடியாது.

சட்டசபையில் எம்.ஜி.ஆரை வெளியேற்றியவர்கள், செருப்பால் அடித்தவர்கள் இன்று சபாநாயகரை தாக்க பார்க்கிறார்கள். அவர்கள் கோட்டையை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கொள்கையை விட்டு விட்டார்கள்.

மறு தேர்தல் நடத்தும் படி ஜனாதிபதியிடம் மனு கொடுத்து உள்ளனர். நான் எந்த பதவிக்கும் வர மாட்டேன். வெளியே தான் இருப்பேன். வெளியில் இருந்து செய்ய வேண்டியதை செய்து காட்டுவேன். தமிழகம் நமது  கையை விட்டு போகாது. இவ்வாறு ம. நடராஜன் பேசினார். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories