December 5, 2025, 7:08 PM
26.7 C
Chennai

யாரு யாரு.. யாரு அந்த ஆரவ்! அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த சிறுவன்!

aarav - 2025

கேரளா மாநிலம் எர்ணாகுளத்துக்கு அருகிலுள்ள பல்லுர்தி – கும்பளாங்கி பகுதியை சேர்ந்த சிறுவன் ஆரவ்.. இங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.. பல்லுர்தி முதல் கும்பளாங்கி வரை தன்னுடைய ஸ்கூலுக்கு ஆட்டோவில்தான் சென்று வருகிறான்.

ஆனால் இவன் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள ரோடுகள் பள்ளங்கள் நிறைந்து காணப்படுகின்றன.. இந்த பள்ளத்தில்தான் ஆட்டோ ஏறி இறங்கி செல்கிறது.. இதனால் எந்தநேரமும் கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயத்திலேயே இவன் இருந்துள்ளதாக தெரிகிறது.

மேலும், சாலைக்கு அருகிலேயே இவனது வீடும் உள்ளதால், எந்த பெரிய வண்டிகள் போனாலும் அதன் அதிர்வு வீட்டிற்குள் கேட்டு, இரவு நேரங்களில் பயந்தபடியே இருந்திருக்கிறான்.. இதை பற்றி பலமுறை புகார் சொல்லியும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால் சிறுவன் நேரிடையாகவே சாலை வசதி கோரி உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு கடிதம் எழுதிவிட்டான்.

அதில், “நிறைய பள்ளங்கள் உள்ள ரோட்டில் ஆட்டோவில் போகவே பயமாக இருக்கிறது.

ஒவ்வொருமுறையும் பள்ளங்களில் ஆட்டோ விழும்போதும் தலைகீழாக கவிழ்ந்து விடுவதுபோல் எனக்கு தோன்றுகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அதற்காகத்தான் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன் ஜட்ஜ் அங்கிள்” என்று தெரிவித்துள்ளான்.

ஆரவ் எழுதிய இந்த கடிதத்தை அவனது அம்மா நீதிபதிக்கு அனுப்பியுள்ளார். நீதிபதியும், ஆரவ்-வின் கடிதத்திற்கு மதிப்பளித்து நடவடிக்கையும் எடுத்துள்ளார்..

ஆரவ் புகார் சொன்ன சாலைகளில் அதிகாரிகள் வெறும் 3 நாளில் விரைந்து வந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆரவ்.. இப்படி பொதுநல விஷயங்களில் ஈடுபடுவது இது முதல் முறை கிடையாது..

ரோட்டில் குவிந்துகிடந்த குப்பைகளை தன்னுடைய அப்பாவின் செல்போனில் வீடியோ எடுத்து அதை பிரதமரின் செயலிக்கும் அனுப்பி வைத்தவன்.. அதேபோல, ரோட்டில் யார் நின்று சிகரெட் பிடித்தாலும் அவர்களிடம் போய் நேருக்கு நேராக நின்று கேள்வி கேட்டுவிடுவானாம்..
சிறுவனுக்கு உள்ள பொதுநல அக்கறையும் அதன் அடிப்படையில் எடுக்கும் நடவடிக்கையும் பாராட்டலுக்கு உள்ளாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories