December 6, 2025, 9:20 PM
25.6 C
Chennai

சென்னை வருகிறார் சுரேஷ் பிரபு: ரயில் திட்டங்கள் துவக்கி வைக்கிறார்

ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு 4–ந்தேதி சென்னை வருகை பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!
ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு 4–ந் தேதி (சனிக்கிழமை) சென்னை வருகிறார். சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் அன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் விழாவில் அவர் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
மூர்மார்க்கெட்–பேசின்பிரிட்ஜ் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 5 மற்றும் 6–வது ரெயில்வே தடங்களில் மின்சார ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
இதேபோன்று எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் ‘வை–பை’ வசதி, தாம்பரம் ரெயில் நிலையத்தில் இரண்டாம் நுழைவுவாயிலில் துரித உணவகம், நெமிலிச்சேரி ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கான சுரங்க பாதை, மாம்பலத்தில் இரட்டை வழித்தடம் கொண்ட புதிய பிளாட்பாரம், கோடம்பாக்கத்தில் புதிய டிக்கெட் முன்பதிவு அலுவலகம், திருவான்மியூரில் பயணிகளுக்கான புதிய நடைமேம்பாலம் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட டிக்கெட் முன்பதிவு அலுவலகம் ஆகியவற்றையும் தொடங்கி வைக்கிறார்.
மதுரை ரெயில் நிலையம்
மேலும் வாரம் இருமுறை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை வரை நீட்டிப்பதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிடுகிறார்.
மதுரை ரெயில் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ‘வை–பை’ வசதி, செங்கோட்டை–ஆரியங்காவு இடையேயான அகல ரெயில்பாதை திட்டம் ஆகியவற்றையும் சுரேஷ் பிரபு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சென்டிரல் ரெயில் நிலையத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் ‘வார்தா’ புயலின் போது பாதிப்படைந்த மேற்கூரைகளை சீரமைக்கும் பணி, நிலையங்களுக்கு வெள்ளையடித்தல், சுத்தப்படுத்துதல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories