வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம்! மத்திய அமைச்சருக்கு எதிராக கொதித்தெழும் இந்து இயக்கங்கள்!

vairamuthu doctor award - 2026

ஆண்டாளை இழிவுபடுத்திய வைரமுத்துவுக்கு, பச்சமுத்துவின் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் “டாக்டர்” பட்டம் வழங்கப்படுகிறது. 28-ஆம் தேதி காலை 11 மணிக்கு இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பட்டத்தை வழங்குகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து இயக்கங்கள் போராட முடிவு செய்துள்ளன.

ஹிந்துக்களின் புனித தெய்வமாகவும் ஆன்மிகத் தமிழ் பரப்பிய ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வாரான தெய்வத் தமிழ்ப் பெண் ஆண்டாளை இழிவுபடுத்தி கட்டுரை வரைந்து உரையாற்றிய சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு, நாடாளுமன்ற உறுப்பினரான பச்சமுத்துவுக்கு சொந்தமான எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் “டாக்டர்” பட்டம் வழங்கப்படுகிறது.

வரும் 28-ஆம் தேதி காலை 11 மணிக்கு பாஜக.,வைச் சேர்ந்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தப் பட்டத்தை வழங்குகிறார்.

இது குறித்த அழைப்பிதழ் வெளியானதும் சமூகத் தளங்களில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்து இயக்கங்களைச் சார்ந்தவர்களும், பாஜக.,வின் அடிமட்டத் தொண்டர்களும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

முன்னர், வைரமுத்துவுக்கு எதிராக பாஜக., தொண்டர்கள்தான் போராட்டங்களை நடத்தினர். இந்து இயக்கங்களுடன் சேர்ந்து, பாஜக.,வினரும் வைரமுத்துவை கண்டித்து போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்த வேளையில், பாஜக., தலைவர்கள் சிலரே வைரமுத்துவுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டு, தொண்டர்களுக்கும் தொண்டர்களின் உணர்வுகளுக்கும் தலைவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று காட்டினர்.

அது பாஜக., தொண்டர்களை பெரிதும் உசுப்பேற்றியுள்ளது.

#metoo இயக்கத்தின் போது, சினிமா பாடலாசிரியர் வைரமுத்து மீது தனது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாடகி சின்மயி, தனது டிவிட்டர் பதிவில் ராஜ்நாத் சிங்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே வைரமுத்துவுக்கு ஆதரவாக, தமிழகத்தில் பாஜக., தலைவர்கள் சிலர் மத்திய அரசுக்குப் பாலமாக இருந்து செயல்படுவதும், வட மாநில எம்.பி.யான தருண் விஜய், திருவள்ளுவர் மற்றும் திருக்குறளின் பெயரைச் சொல்லி, வைரமுத்துவுக்கு துதி பாடுவதும் பாஜக., அடிமட்டத் தொண்டர்களை உசுப்பேற்றியிருந்தது.. இந்நிலையில், வைரமுத்துவுக்காக ‘தரகர்’ வேலை பார்க்கும் பாஜக., தமிழகத் தலைவர்களை தொண்டர்களே தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் விமர்சித்து வருகின்றனர்.

[poll id=’29’]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories