December 6, 2025, 5:46 AM
24.9 C
Chennai

பொய்ச் செய்திகளை வழங்குவதில் இந்திய ஊடகங்களுக்கு 2வது இடம்

பெரும்பாலான தேசிய ஊடகங்களின் பொய்ச் செய்திகள், பொய்ப் பிரச்சாரங்களின் காரணமாக இந்திய ஊடகங்களின் நம்பகத்தன்மை குறைந்துள்ளது என உலக பொருளாதார மன்றம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஊடக நெறிமுறைகளையோ, சமூக பொறுப்போ இல்லாமல் கடந்த சில வருடங்களாகவே இந்திய ஊடகங்கள் செயல்பட்டு வருவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களின் எழுச்சி காரணமாக ஊடகங்களின் இந்த போலி தன்மை வெளிப்பட்டு விட்டதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. பத்திரிகையாளர்கள் என தங்களை கூறிக்கொண்டு, ஆதாயத்திற்காக அரசியல் கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்களைப் போல் சில பத்திரிகையாளர்கள் செயல்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
நம்பகத்தன்மையற்ற நிறுவனங்களில் இந்திய ஊடகத்துறை இரண்டாம் இடம் வகிக்கிறது என்ற தலைப்பில் உலக பொருளாதார மன்றம் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. எடல்மன் டிரஸ்ட் என்ற நிறுவனம் இந்த சர்வேயில் ஈடுபட்டது. இந்த நிறுவனம் கடந்த 20 வருடங்களாக ஊடகத்துறையில் கால்பதித்து வருவதோடு, 38 நாடுகளில் நிறுவனங்களை நடத்தி வருகிறது.
ஊடகங்கள் மட்டுமின்றி வணிக நிறுவனங்கள், அரசு சார்பற்ற அமைப்புகள் (என்.ஜி.ஓ) ஆகியவற்றின் நம்பகத் தன்மை பற்றியும் இந்த நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. நம்பகத்தன்மையற்ற ஊடகங்கள் உள்ள நாடுகளில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 3வது இடத்தில் அயர்லாந்தும், 4வது இடத்தில் சிங்கப்பூரும், 5வது இடத்தில் துருக்கியும் உள்ளன. உலகின் 3ல் 2 பங்கு நாடுகளில் ஊடகங்கள் பற்றி மக்கள் எதிர்மறையான கருத்துக்களையே தெரிவிக்கின்றனர்.
தங்களது டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகப்படுத்தவும், சுய நலன்களை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கிலும் செய்திகள் வெளியிடபடுவதால் அந்த செய்திகளை தாங்கள் நம்புவதில்லை என பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories