February 21, 2026, 9:01 PM
27.3 C
Chennai

பொய்ச் செய்திகளை வழங்குவதில் இந்திய ஊடகங்களுக்கு 2வது இடம்

பெரும்பாலான தேசிய ஊடகங்களின் பொய்ச் செய்திகள், பொய்ப் பிரச்சாரங்களின் காரணமாக இந்திய ஊடகங்களின் நம்பகத்தன்மை குறைந்துள்ளது என உலக பொருளாதார மன்றம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஊடக நெறிமுறைகளையோ, சமூக பொறுப்போ இல்லாமல் கடந்த சில வருடங்களாகவே இந்திய ஊடகங்கள் செயல்பட்டு வருவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களின் எழுச்சி காரணமாக ஊடகங்களின் இந்த போலி தன்மை வெளிப்பட்டு விட்டதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. பத்திரிகையாளர்கள் என தங்களை கூறிக்கொண்டு, ஆதாயத்திற்காக அரசியல் கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்களைப் போல் சில பத்திரிகையாளர்கள் செயல்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
நம்பகத்தன்மையற்ற நிறுவனங்களில் இந்திய ஊடகத்துறை இரண்டாம் இடம் வகிக்கிறது என்ற தலைப்பில் உலக பொருளாதார மன்றம் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. எடல்மன் டிரஸ்ட் என்ற நிறுவனம் இந்த சர்வேயில் ஈடுபட்டது. இந்த நிறுவனம் கடந்த 20 வருடங்களாக ஊடகத்துறையில் கால்பதித்து வருவதோடு, 38 நாடுகளில் நிறுவனங்களை நடத்தி வருகிறது.
ஊடகங்கள் மட்டுமின்றி வணிக நிறுவனங்கள், அரசு சார்பற்ற அமைப்புகள் (என்.ஜி.ஓ) ஆகியவற்றின் நம்பகத் தன்மை பற்றியும் இந்த நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. நம்பகத்தன்மையற்ற ஊடகங்கள் உள்ள நாடுகளில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 3வது இடத்தில் அயர்லாந்தும், 4வது இடத்தில் சிங்கப்பூரும், 5வது இடத்தில் துருக்கியும் உள்ளன. உலகின் 3ல் 2 பங்கு நாடுகளில் ஊடகங்கள் பற்றி மக்கள் எதிர்மறையான கருத்துக்களையே தெரிவிக்கின்றனர்.
தங்களது டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகப்படுத்தவும், சுய நலன்களை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கிலும் செய்திகள் வெளியிடபடுவதால் அந்த செய்திகளை தாங்கள் நம்புவதில்லை என பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories