மார்கழி மாச மகிமைக் கோலம்… கருணா, சுடாலின், கனிமொழி வீடுகளில் கன ஜோர்! பாதை திரும்பிய பகுத்தறிவு!

kanimozhi house - 2026

தி.மு.க., தலைவர் சுடாலின், கனிமொழி, மறைந்த முன்னாள் திமுக., தலைவர் கருணாநிதி ஆகியோரின் வீட்டு வாசல்களில் மார்கழி மாதத்தில் போடப்படும் கோலங்கள் வரையப் பட்டு, அதற்கு முன் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்களை சிறிதாகப் பதிவு செய்து, வேண்டாம் என்று எழுதப் பட்டிருந்தது. இதனைக் கண்டு, பாதை திரும்பிவிட்டார்களா இந்தப் பகுத்தறிவு வாதிகள் என்று சமூகத் தளங்களில் கருத்து மழை பொழிந்து வருகிறார்கள் பலர்.

சென்னை பெசன்ட்நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரிப் பெண்கள் போர்வையில் சிலர் கோலமிட்டனர். இதனையடுத்து அவ்வாறு கோலமிட்டு வாசகங்களை அத்துமீறி எழுதிய 6 பெண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப் பட்டனர். இதற்கு மு.க.சுடாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள சுடாலின் வீடு, கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீடு, சி.ஐ.டி., காலனியில் உள்ள கனிமொழி வீடு என அவர்களின் வீட்டு வாசல்களின் முன்னர், மார்கழி மாதத்தில் இந்துக்கள் மத நம்பிக்கையுடன் போடும் கோலங்களை வரைந்து, அருகே வேண்டாம் CAA, NRC என்று எழுதி, கோலத்தின் அருகில் சில பூக்களையும் வைத்துள்ளனர்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!
kolam protest - 2026

இது குறித்து கருத்து தெரிவித்த திமுக.,வினர் சிலர், பெசன்ட்நகரில் கோலம் போட்ட பெண்களைக் கைது செய்தது போல், ஸ்டாலின், கனிமொழி ஆகியோரைக் கைது செய்யுங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டுள்ளனர்.

ஆனால் இவர்களின் இந்தச் செயலை வேறு விதமாக அணுகியுள்ளது பாஜக.,! இதுவரை பகுத்தறிவு பேசியவர்கள், இந்துக்களின் புனித மாதமான மார்கழியில், இந்துக்கள் மத நம்பிக்கையுடன் போடும் கோலங்களை தங்கள் வீட்டின் முன், ஏதோ குடியுரிமை சட்டத்துக்கு எதிராக செயல்படுவது போல் காட்டிக் கொண்டு, தங்களின் நலன் கருதி போட்டுக் கொண்டிருக்கின்றனர் என்று கூறுகின்றனர்.

ஸ்டாலின் வீட்டில் கோலம் போட்டது தொடர்பாக பாஜக., பிரமுகர் நாராயணன் திருப்பதி வெளியிட்டிருக்கும் கருத்தில், ஜனநாயகத்தில் யாரும் தங்களின் எதிர்ப்பை காட்டலாம். இது தவறு அல்ல. நாத்திகம் பேசும் நபர்கள் கோலம் போடுவது வரவவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. இதனால் பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர்.

ALSO READ:  நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

பகுத்தறிவு பகலவனின் வீட்டில் கோலம் போட வைத்தாகி விட்டது. தமிழரின் கலாச்சாரத்திற்கு திரும்புகிறது திராவிட பெரியார் மண் என்பதே சிறந்த விசயம்.

https://twitter.com/Kumar82531993/status/1211476053052420096

இது அக்மார்க் இந்து வீடு என்பதைக் காட்டுகிறது மறைந்த முதல்வர் #கருணாநிதி அவர்களின் கோபாலபுரம் இல்லம்.
எங்கே காவி வெள்ளை பட்டை அடித்தால் விமர்சிப்பார்களோ? என டைல்ஸ் பதித்து , இது இந்து வீடு என சொல்லி இருக்கிறார்.
சனாதனத்தை காக்கும் #கருணாநிதி
நன்றி ஸ்டாலின் அவர்களே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories