மார்கழி மாச மகிமைக் கோலம்… கருணா, சுடாலின், கனிமொழி வீடுகளில் கன ஜோர்! பாதை திரும்பிய பகுத்தறிவு!

kanimozhi house - 2026

தி.மு.க., தலைவர் சுடாலின், கனிமொழி, மறைந்த முன்னாள் திமுக., தலைவர் கருணாநிதி ஆகியோரின் வீட்டு வாசல்களில் மார்கழி மாதத்தில் போடப்படும் கோலங்கள் வரையப் பட்டு, அதற்கு முன் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்களை சிறிதாகப் பதிவு செய்து, வேண்டாம் என்று எழுதப் பட்டிருந்தது. இதனைக் கண்டு, பாதை திரும்பிவிட்டார்களா இந்தப் பகுத்தறிவு வாதிகள் என்று சமூகத் தளங்களில் கருத்து மழை பொழிந்து வருகிறார்கள் பலர்.

சென்னை பெசன்ட்நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரிப் பெண்கள் போர்வையில் சிலர் கோலமிட்டனர். இதனையடுத்து அவ்வாறு கோலமிட்டு வாசகங்களை அத்துமீறி எழுதிய 6 பெண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப் பட்டனர். இதற்கு மு.க.சுடாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள சுடாலின் வீடு, கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீடு, சி.ஐ.டி., காலனியில் உள்ள கனிமொழி வீடு என அவர்களின் வீட்டு வாசல்களின் முன்னர், மார்கழி மாதத்தில் இந்துக்கள் மத நம்பிக்கையுடன் போடும் கோலங்களை வரைந்து, அருகே வேண்டாம் CAA, NRC என்று எழுதி, கோலத்தின் அருகில் சில பூக்களையும் வைத்துள்ளனர்.

kolam protest - 2026

இது குறித்து கருத்து தெரிவித்த திமுக.,வினர் சிலர், பெசன்ட்நகரில் கோலம் போட்ட பெண்களைக் கைது செய்தது போல், ஸ்டாலின், கனிமொழி ஆகியோரைக் கைது செய்யுங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டுள்ளனர்.

ஆனால் இவர்களின் இந்தச் செயலை வேறு விதமாக அணுகியுள்ளது பாஜக.,! இதுவரை பகுத்தறிவு பேசியவர்கள், இந்துக்களின் புனித மாதமான மார்கழியில், இந்துக்கள் மத நம்பிக்கையுடன் போடும் கோலங்களை தங்கள் வீட்டின் முன், ஏதோ குடியுரிமை சட்டத்துக்கு எதிராக செயல்படுவது போல் காட்டிக் கொண்டு, தங்களின் நலன் கருதி போட்டுக் கொண்டிருக்கின்றனர் என்று கூறுகின்றனர்.

ஸ்டாலின் வீட்டில் கோலம் போட்டது தொடர்பாக பாஜக., பிரமுகர் நாராயணன் திருப்பதி வெளியிட்டிருக்கும் கருத்தில், ஜனநாயகத்தில் யாரும் தங்களின் எதிர்ப்பை காட்டலாம். இது தவறு அல்ல. நாத்திகம் பேசும் நபர்கள் கோலம் போடுவது வரவவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. இதனால் பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர்.

பகுத்தறிவு பகலவனின் வீட்டில் கோலம் போட வைத்தாகி விட்டது. தமிழரின் கலாச்சாரத்திற்கு திரும்புகிறது திராவிட பெரியார் மண் என்பதே சிறந்த விசயம்.

https://twitter.com/Kumar82531993/status/1211476053052420096

இது அக்மார்க் இந்து வீடு என்பதைக் காட்டுகிறது மறைந்த முதல்வர் #கருணாநிதி அவர்களின் கோபாலபுரம் இல்லம்.
எங்கே காவி வெள்ளை பட்டை அடித்தால் விமர்சிப்பார்களோ? என டைல்ஸ் பதித்து , இது இந்து வீடு என சொல்லி இருக்கிறார்.
சனாதனத்தை காக்கும் #கருணாநிதி
நன்றி ஸ்டாலின் அவர்களே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories