தன் அமைப்பை தடை செய்த விவகாரம்: மத போதகர் சாகிர் நாயக்கின் மனு தள்ளுபடி!

புதுதில்லி: இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் என்னும் தன்னுடைய அரசு சாரா அமைப்பை மத்திய அரசு தடை செய்ததை எதிர்த்து சர்ச்சைக்குரிய மத போதகர் சாகிர் நாயக் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
வெளிநாட்டில் வசிக்கும் சாகிர் நாயக் என்பவர் இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் என்னும் பெயரில் ஓர் அரசு சாரா அமைப்பை நிறுவி அதன் மூலம் இஸ்லாமிய மதம் தொடர்பான பிரச்சாரங்களை செய்து வருகிறார். நிறைய தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் அவர் இத்தகைய பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார்.
சாகிர் நாயக்கின் அமைப்பு மூலம் இளைஞர்கள் மத்தியில் மதம் சார்ந்த அடிப்படைவாத எண்ணங்கள் ஊக்குவிக்கப்படுவதாகவும், இதன் காரணமாக அவர்கள் ஏதேனும் தீவிரவாத இயக்கங்களில் சேர வாய்ப்பு இருப்பதாகவும் கருதிய மத்திய அரசு, கடந்த ஆண்டு நவம்பர் 17 அன்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு அறிவிப்பு மூலம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தை ஐந்து ஆண்டுகள் தடை செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சாகிர் நாயக் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.தடைக்கு தகுந்த காரணங்களோ அல்லது ஆவணங்களோ தாக்கல் செய்யப்படவில்லை என்றும், முன்னதாக விளக்கம் கோரி நோட்டீஸ் எதுவும் அனுப்பப்படவில்லை என்றும் சாகிர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது மத்திய உள்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டதற்கு காரணமான ரகசிய ஆவணங்கள் தாக்கல் செய்யயப்பட்டன.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது நீதிபதி சச்தேவா பிரச்சாரகர் சாகிர் நாயக்கின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் உடனடியாக தடை செய்யயப்பட்டதற்கு போதுமான காரணங்கள் உள்ளதாகவும், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் பொது பாதுகாப்பை கருத்தில் கொண்டே இத்தகைய நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது என்றும் அவர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Entertainment News

Popular Categories