ஐந்தாயிரம் கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ்!’ -தமிழகத்தில் கிளைவிடும் திட்டம்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரதிநிதிகள் சபைக் கூட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது. ' 
இந்துக் கலாசாரத்துக்கு இணையானது தமிழ்க் கலாசாரம். வரும் நாட்களில் தமிழகத்தின் அனைத்துக்  கிராமங்களிலும் அமைப்பை வலுப்படுத்தும் வகையில் செயல் திட்டத்தை உருவாக்க இருக்கிறோம்' என்கின்றனர் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள். 
ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய பிரதிநிதிகள் சபைக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு ஜோத்பூரில் சபைக் கூட்டம் நடந்தது. இந்த ஆண்டு கோயம்புத்தூரில் தொடங்கிய கூட்டத்தை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தொடங்கி வைத்திருக்கிறார். நாளை கூட்டம் நிறைவடைய இருக்கிறது.
 கடந்த இரண்டு நாட்களாக நடந்து வரும் கூட்டத்தில், அமைப்பை பலப்படுத்துவது; கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை முழுமையாகக் கொண்டு வருவது; இந்து மதத் தலைவர்கள் மீதான தாக்குதல்கள் உள்பட பல விஷயங்களைப் பற்றி ஆலோசித்துள்ளனர். "
 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் இந்தக் கூட்டம் நடந்து வருகிறது. கன்னியாகுமரியில் இருந்து அருணாச்சலப் பிரதேசம் வரையில் உள்ள அனைத்து மாவட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
 இதுதவிர, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து பிரிந்து 40 அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகளில் தேசிய தலைவர்கள் மட்டும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 1,400 பேர் வரையில் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்" என விவரித்த ஆர்.எஸ்.எஸ் தமிழக செய்தித் தொடர்பாளர் சடகோபன் தொடர்ந்து நம்மிடம் பேசினார். சடகோபன்
"ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, பிரதிநிதிகள் சபைக் கூட்டத்தில் விவாதிப்போம். ' கடந்த ஆண்டு திட்டமிட்டதில் எவ்வளவு விஷயங்களை சாத்தியப்படுத்தியிருக்கிறோம்? என்ன மாதிரியான தோல்விகள் ஏற்பட்டுள்ளன? அதற்கான காரணங்கள் என்ன?' என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறோம். மாநிலத்தில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருந்தால், அதற்கான காரணத்தைப் பகிர்ந்துகொள்கிறோம். ' பின்தங்கியிருந்தால், அதற்கான காரணம் குறித்து ஆலோசனை நடக்கும். 
எங்களுடன் இணைந்து செயல்படும் மற்ற அமைப்புகள் இந்த ஓராண்டுக் காலத்தில், 'என்னென்ன சாதித்தார்கள்?' என்பதைப் பற்றி விளக்கி வருகின்றனர். மூன்று நாள் நடக்கும் கூட்டத்தில், இரண்டு நாட்கள் முழுக்க வெற்றி தோல்வி குறித்துத்தான் கவனத்தைச் செலுத்தி வருகிறோம். அதேபோல், மாநிலத்தில் என்ன பிரச்னை இருக்கிறது? ஒவ்வொரு மாநிலத்தின் சமூக சூழல்கள்தான் அமைப்பின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம். இதைப் பற்றிய பாடம் மிக முக்கியமானது.
 ஆர்.எஸ்.எஸ் தொடங்கிய காலத்தில் இருந்தே, தமிழகத்தின் மீது தலைவர்கள் கூடுதல் கவனத்தைச் செலுத்தி வருகின்றனர். 'இன்னும் நல்லமுறையில் அமைப்பை வளர்த்தெடுக்க வேண்டும்' என வலியுறுத்திக் கொண்டே இருப்பார்கள்.
 தமிழ்நாட்டின் மீது ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு மிகப் பெரிய நம்பிக்கை உண்டு. இந்துக் கலாசாரத்தைக் கடைப்பிடிக்கும் மாநிலம் என்பதால், தேசிய தலைவர்கள் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். 
நேற்று தொடக்க விழா நிகழ்வில், நாகஸ்வர இசை, ஜல்லிக்கட்டுக் காளை கண்காட்சி, கரகாட்டம், ஒயிலாட்டம், உணவு முறைகள் என அனைத்தையும் தமிழகம் சார்ந்தே காட்சிப்படுத்தியிருந்தோம். தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள், இந்த மண்ணின் மகான்கள் குறித்து விளக்கப் படமும் வைத்திருந்தோம். ' இந்து வாழ்க்கை முறை உயிரோட்டமாக இருப்பது தமிழகத்தில்தான். தமிழ்க் கலாசாரம் நமக்கு விரோதமானது கிடையாது. நம்முடன் இணைந்த ஓர் இணை கலாசாரம். இங்குள்ள புறச் சூழல்களால் சங்கம் வளர்வதற்கு பல தடைகள் உள்ளன. அவற்றை எதிர்கொண்டு நாம் வளர வேண்டும்' என்பதுதான் அகில இந்திய தலைவர்களின் கருத்தாக இருக்கிறது.
 இந்தக் கூட்டத்தில், மூன்று வருடத்துக்கு ஓர் இலக்கு எனத் தீர்மானித்து அறிவிக்க இருக்கிறார்கள்.
மாவட்ட அளவில் நடக்கும் பணிகளை கிராமங்களை நோக்கி வேகப்படுத்த இருக்கிறோம். சில ஊர்களில் இருந்து எங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு வருகின்றவர்களிடம், மாதம் ஒரு கூட்டத்தை நடத்துமாறு வலியுறுத்துவோம். அதில் முன்னேற்றம் ஏற்படும்போது வாரக் கூட்டமும் அதை அப்படியே தினசரிக் கூட்டங்களாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறோம்.
 இன்னமும் தமிழகக் கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ் முழுமையாகச் சென்று சேரவில்லை என்ற குறை இருக்கிறது. இங்குள்ள ஐந்தாயிரம் கிராமங்களில்தான் அமைப்பு வேலைகள் நடந்து வருகின்றன.
 மத்திய பிரதேசத்தில் உள்ள 80 சதவீத கிராமங்களில் அமைப்புரீதியாக வலுவானவர்களாக மாறியிருக்கிறோம். நாளை நிறைவடையும் கூட்டத்தில், அடுத்த ஓராண்டுக்கான செயல் திட்டங்களை வகுக்க இருக்கிறோம். இதைப் பற்றி அகில இந்திய தலைவர் மோகன் பாகவத் விளக்க இருக்கிறார்" என்றார் விரிவாக.
ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories