திருநாவுக்கரசரை நீக்க மேலிடம் முடிவு?

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டது முதலே சர்ச்சைகள். அதுவும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவாளர்கள் பகிரங்கமாகவே திருநாவுக்கரசருக்கு எதிராக செயல்பட்டனர். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடங்கி அதிமுகவின் வாய்ஸாக திருநாவுக்கரசர் மாறிவிட்டது என்பதும் இளங்கோவன் தரப்பின் குற்றச்சாட்டு. தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து கொண்டே திமுக தலைவர்களின் கருத்தை நிராகரித்து பேசிவந்தார் திருநாவுக்கரசர்.
இதற்கு இளங்கோவன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இந்த ஆடுபுலி ஆட்டத்தின் உச்சமாகத்தான் திருநாவுக்கரசர் யார் என்றே தெரியாது என அதிரடி காட்டினார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
ஆனால் திருநாவுக்கரசை மாற்றும் முடிவுக்கு டெல்லி மேலிடம் வந்ததைத் தொடர்ந்துதான் இளங்கோவன் தனி ஆவர்த்தனத்தை தீவிரப்படுத்தினார் என்கின்றன காங். வட்டாரங்கள். சென்னையில் திருநாவுக்கரசரை அழைக்காமலேயே பொதுக்கூட்டமும் நடத்தினார் இளங்கோவன்.
திருநாவுக்கரசரை நியமிக்கும் முன்னர் ப.சிதம்பரத்தைத்தான் தமிழக காங். தலைவராக்க டெல்லி மேலிடம் விரும்பியதாம். ஆனால் அப்போது தமக்கு மாநில அரசியலில் விருப்பம் இல்லை என கூறி அதை நிராகரித்துவிட்டாராம் ப.சிதம்பரம்.
தற்போது தமிழகத்தில் அரசியல் குழப்பங்கள் நீடிக்கும் நிலையில் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு ப.சிதம்பரம் பச்சைக் கொடி காட்டிவிட்டாராம். அத்துடன் தம்மை மாநில காங்கிரஸ் தலைவர்கள் போல் நடத்தக் கூடாது என சிலபல நிபந்தனைகளையும் விதித்திருக்கிறார் ப.சிதம்பரம். இதை ஏற்றுக் கொண்ட மேலிடம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது என்கின்றன டெல்லி தகவல்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories