December 6, 2025, 8:13 AM
23.8 C
Chennai

திருவானைக்காவல் கோ யில் பங்குனி தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் -அகிலாண்டேஸ்வரி கோவிலில் நடந்த பங்குனி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பஞ்ச பூதங்களில் நீர் ஸ்தலமாக விளங்கும் திருச்சி திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வர-அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி தேரோட்டம் சிறப்பு வாய்ந்தது. 

இந்த ஆண்டு பங்குனி தேரோட்டத்திற்கான கொடியேற்றம் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து 23-ந் தேதி கோவிலின் 8 திசைகளிலும் கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்  28-ந் தேதி நடந்தது. 

தேரோட்டத்தையொட்டி சுவாமி ஒரு பெரிய தேரிலும், அம்பாள் மற்றொரு பெரிய தேரிலும் அதிகாலையில் எழுந்தருளினர். முன்னதாக விநாயகரும், சுப்ரமணியரும் சிறிய தேரில் புறப்பட்டு தேரோடும் வீதிகளில் வலம் வந்து கோயிலை வந்தடைந்தனர். 
அதன்பின்னர், காலை 5.45 மணிக்கு சுவாமி தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சுவாமி தேர் மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி ஆகிய 4 பிரகாரங்களில் வீதி உலா வந்தது. காலை 7 மணிக்கு மேல உள்வீதியும், தெற்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது.
பின்னர் காலை 7.30 மணிக்கு அம்பாள் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் அம்பாள் வீற்றிருக்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அதன் பின்னர் மறுபடியும் சுவாமி தேரை வடம்பிடித்து இழுத்தனர். இரண்டு தேரும் காலை 10.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. 
தேரோட்டத்தை யொட்டி அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேஸ்வரர், சோமாஸ் கந்தர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 
தேரோட்டத்தின் போது யானை அகிலா தேருக்கு முன்னால் செல்ல மேளதாளங்கள், வாண வேடிக்கையுடன் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்தனர்.
தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ, சிவ என்று விண்ணதிர கோஷம் எழுப்பி தேர்களை வடம்பிடித்து இழுத்தனர். 
தமிழகத்தில் சுவாமியும், அம்பாளும் தனித்தனி தேர்களில் வலம் வருவது திருவானைக்காவலில் மட்டும் தான். 
தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜெயப்ரியா உள்துறை மேலாளர் ஆறுமுகம் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories